/* */

சாத்தூர் வைப்பாற்றில் குளிக்க சென்ற சிறுவன் நீரில் மூழ்கி மாயம்

சாத்தூர் வைப்பாற்றில் குளிக்க சென்ற சிறுவன் நீரில் மூழ்கி மாயம். பல மணி நேரம் தேடியும் உடல் கிடைக்கவில்லை.

HIGHLIGHTS

சாத்தூர் வைப்பாற்றில் குளிக்க சென்ற சிறுவன் நீரில் மூழ்கி மாயம்
X

சாத்தூர் வைப்பாற்றில் குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி மாயம். தீயணைப்புத் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சாத்தூர் வைப்பாற்றில் குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி மாயம். பல மணி நேரம் தேடியும் உடல் கிடைக்கவில்லை.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வைப்பாற்றில் குளிக்கச் சென்ற 14 வயது சிறுவன் நீரில் மூழ்கி மாயம். தீயணைப்புத்துறையினர் பல மணி நேரம் தேடியும் கிடைக்கவில்லை. இச்சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படித்தியுள்ளது.

காட்டுபுதுத் தெருவை சேர்ந்த பாஸ்கரன் என்பவர் சாத்தூர் நகராட்சியில் ஒப்பந்தத் தொழிலாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவரது மகன் ஹரிகரபிரபு (14). சிறுவன் ஹரிஹர பிரபு இன்று காலை வீட்டின் அருகே இருக்கும் வைப்பாற்றுக்கு நண்பர்களுடன் குளிக்க சென்றுள்ளார். ஆற்றுக்குள் இறங்கி குளித்து கொண்டு இருந்த போது ஆழமான பகுதிக்கு சென்றுள்ளான். அப்போது ஆற்றில் செல்லும் நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளான். இதனைக் கண்ட நண்பர்கள் கூச்சலிட அருகிலிருந்தவர்கள் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறைவீரர்கள் பல மணி நேரம் ஆற்று பகுதி முழுவதும் தேடியுள்ளனர். ஏற்கனவே ஆற்றில் வெள்ளம் செல்வதால் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது. எனினும் சிறுவனின் உடல் கிடைக்காததால் அப்பகுதி முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. காவல்துறை மற்றும் நகராட்சி சார்பில் ஆற்றில் வெள்ளம் செல்வதால் குளிப்பது அப்பகுதிக்கு செல்வதோ கூடாது என்று தொடர்ந்து அறிவுறுத்தியும் இவ்வாறு சிறுவர்கள் பொதுமக்கள் ஆற்றில் குளிக்கச் சென்று வெள்ள நீரில் அடித்துச் செல்லப்படுவது வாடிக்கையாக உள்ளது.

Updated On: 8 Dec 2021 8:48 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  2. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  5. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்