ஏழை பெண்ணுக்கு இலவச சைக்கிள் வழங்கிய சப்-இன்ஸ்பெக்டர்

சிவகாசி, அய்யப்பன் காலனியை சேர்ந்தவர் பாக்கியலட்சுமி (வயது 57). குடும்ப வறுமையை போக்க சைக்கிளில் சென்று ஊர், ஊராக அப்பளம் விற்பனை செய்து வந்தார்.
இந்தநிலையில், இவர் கடந்த சில நாட்களுக்கு முன் சிவகாசி மாரியம்மன் கோவில் அருகில் தனது சைக்கிளை நிறுத்தி விட்டு சென்ற போது மர்ம ஆசாமி யாரோ திருடி சென்றுவிட்டார். இது குறித்து அவர் சிவகாசி கிழக்கு போலீசில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சிவராமகிருஷ்ணன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், சைக்கிள் திருட்டால் வியாபாரம் பாதிக்கப்பட்ட பாக்கியலட்சுமிக்கு தனது சொந்த பணத்தில் ஒரு புதிய சைக்கிளை சப்-இன்ஸ்பெக்டர் சிவராமகிருஷ்ணன் வாங்கி கொடுத்துள்ளார். இதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்ட பாக்கியலட்சுமி, உறவினர்களுடன் வந்து சப்-இன்ஸ்பெக்டருக்கு நேரில் நன்றி தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu