/* */

பட்டாசு கடை உரிமம் பெற ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலாளர் கைது

சாத்தூர் அருகே பட்டாசு கடை உரிமம் பெற வரைபடத்திற்கு லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலாளரை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கைது.

HIGHLIGHTS

பட்டாசு கடை உரிமம் பெற ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலாளர் கைது
X

லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்ட ஊராட்சி செயலாளர் கதிரேசன்.

சாத்தூர் அருகே பட்டாசு கடை உரிமம் பெற வரைபடத்திற்கு லஞ்சம் வாங்கிய ஊராட்சி மன்ற செயலாளரை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கைது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெங்கடாசலபுரத்தை சேர்ந்தவர் திருமலைராஜ் (50). இவர் மேட்டமலை பஞ்சாயத்திற்கு உட்பட்ட பகுதியில் பட்டாசுக் கடைக்கு உரிமத்திற்கு கட்டிட வரைபட அனுமதி பெற ஊராட்சி செயலாளர் கதிரேசன் (52) என்பவரை அணுகி உள்ளார். இந்த நிலையில் பட்டாசு கடை கட்டிட வரைபட அனுமதி பெற திருமலைராஜிடம் கதிரேசன் 50 ஆயிரம் லஞ்சம் கேட்டு உள்ளார். இதனையடுத்து திருமலைராஜ் விருதுநகர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

இந்த நிலையில் விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் அறிவுறுத்தலின்படி ரசாயன பவுடர் பூசிய ரூ. 20,000 பணத்தை முன்பணமாக திருமலைராஜன் கதிரேசனிடம் கொடுக்கும் போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கதிரேசனை கையும் களவுமாக பிடித்தனர். இதனை அடுத்து விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி ராமச்சந்திரன் மற்றும் ஆய்வாளர்கள் பூமிநாதன் மற்றும் பாரதிபிரியா உள்பட 10க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் மேட்டமலை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் மேட்ட மலை ஊராட்சி மன்றத்தலைவர் பார்த்தசாரதி மற்றும் துணைத் தலைவர் ராஜசேகர் ஆகியோர் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை மேற்கொண்டனர். இரண்டு பேரின் வீடுகளில் செய்த சோதனையில் பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. மேலும் பட்டாசு கடை கட்டிடத்திற்கு வரை பட அனுமதி பெற லஞ்சம் வாங்கிய கதிரேசன் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 8 Feb 2022 1:25 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘இன்று போல் என்றும் வாழ்க’ - 25வது திருமண ஆண்டு வாழ்த்துகள்
  2. லைஃப்ஸ்டைல்
    அண்ணா அண்ணிக்கு அன்பு நிறைந்த திருமண நாள் வாழ்த்துகள்...!
  3. ஆன்மீகம்
    தமிழில் நட்சத்திர பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  4. ஆன்மீகம்
    ஈகைப் பெருநாளின் சிறப்புகளும் வாழ்த்து மொழிகளும்
  5. அரசியல்
    பாஜகவுடன் சேர்வது தற்கொலைக்கு சமம் என்ற தினகரன் இப்ப ஏன் கூட்டணி...
  6. மாதவரம்
    சோழவரம் ஒன்றியத்தில் தண்ணீர் பந்தல் திறந்து வைத்த சுதர்சனம் எம்எல்ஏ
  7. திருவள்ளூர்
    தண்ணீர் தேடி வந்த புள்ளிமான் நாய்கள் கடித்ததில் படுகாயம்
  8. வீடியோ
    அப்பா அம்மா ரெண்டுபேருமே படிக்கல |உணர்ச்சிபொங்க சொன்ன மாணவி!உருகி...
  9. லைஃப்ஸ்டைல்
    மனைவியின் பிறந்தநாள்: அன்பையும் மதிப்பையும் காட்ட சிறந்த சந்தர்ப்பம்
  10. தமிழ்நாடு
    நாட்டாமைக்கு பா.ஜ.க.,வில் புதிய பதவி?