நாட்டு வைத்தியம் பார்க்க சென்ற சிறுவன் உயிரிழப்பு

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நாட்டு வைத்தியம் பார்க்க சென்ற 10 வயது சிறுவன் உயிரிழந்தார்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அண்ணா நகரை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. கூலி வேலை செய்து வருகிறார். இவரது மகன் ஹரிஷ் (10). ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார்.இந்நிலையில் ஹரிஷ் க்கு கடந்த 4 நாட்களாக காய்ச்சல் இருந்துள்ளது. இதனால் இன்று ஹரீசை அழைத்துக்கொண்டு பெற்றோர், சாத்தூர் அருகே பட்டம்புதூர் கிராமத்தில் நாட்டு வைத்தியம் பார்க்க சென்றுள்ளனர்.
பின்னர் வீட்டிற்கு திரும்பி வரும் வழியில் ஹரீஷ்க்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. அப்போது அருகிலிருந்த சுங்கச்சாவடி ஆம்புலன்சில் சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்து சேர்த்தனர்.ஆனால் வழியிலேயே ஹரிஷ் உயிரிழந்ததாக சாத்தூர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து வச்சக்காரப்பட்டி காவல்துறையினர் வழக்குபதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu