நகர்புற உள்ளாட்சி தேர்தல்: விருப்ப மனு அளித்தவர்களிடம் அமைச்சர் நேர்காணல்

இராஜபாளையம் நகராட்சி வார்டுகவுன்சிலர் பதவிக்கு போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்தவர்களிடம் வருவாய்துறை அமைச்சர் நேர்காணல் 67 பேர் பங்கேற்பு.
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட 42 வார்டுகளில் கவுன்சிலர் பதவிக்கான தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் திமுக சார்பில் 107 பேர் விருப்ப மனு தாக்கல் செய்து இருந்தனர். இன்று வருவாய்த்துறை அமைச்சர் கேகே.எஸ்எஸ்.ஆர் ராமச்சந்திரன் தலைமையில் நேர்காணல் நடைபெற்றது
நேர்காணலில் இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன். தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம் குமார் .மாவட்ட துணை செயலாளர் ராசா அருண்மொழி நகர பொருப்பாளர்கள் ராமமூர்த்தி மணிகண்டராஜா மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இந்த நேர்காணலில் விருப்ப மனு கொடுத்த 107 பேரில் 67 பேர் கலந்துகொண்டனர் .
தங்கள் வார்டுகளில் எந்த மாதிரியான பணிகள் செய்வீர்கள் மக்கள் பிரச்சனைகள் எந்த அளவுக்கு அறிந்துள்ளீர்கள் என்பது குறித்து நேர்காணலில் அமைச்சர் கே.கே.எஸ் எஸ்.ஆர் ராமசந்திரன் கலந்துரையாடினார் கலந்து கொண்டவர்கள் தங்களுக்கு வாய்ப்பளித்தால் தலைமைக்கு கட்டுப்பட்டு சிறப்பாக செயல்படுவேன் என தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu