/* */

தேங்கி நிற்கும் கழிவுநீர்; சீரமைக்க மக்கள் கோரிக்கை

ராஜபாளையத்தில் ஆங்காங்கே தேங்கி நிற்கும் கழிவுநீரால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

HIGHLIGHTS

தேங்கி நிற்கும் கழிவுநீர்; சீரமைக்க மக்கள் கோரிக்கை
X

பைல் படம்.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் மதுரைராஜா கடைத்தெருவில் உள்ள கழிவுநீர் கால்வாய் உடைந்து ஆங்காங்கே கழிவு நீர் தேங்கி நிற்கிறது. ஆதலால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் தொற்றுநோய் பரவும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.

இப்பகுதியில் மருத்துவமனை, கோவில் மற்றும் வணிக நிறுவனங்கள் அதிகம் இருப்பதால் இந்த வழியாக தினமும் எண்ணற்ற மக்கள் சென்று வருகின்றனர். அவ்வாறு செல்பவர்கள் துர்நாற்றத்தை தாங்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.

அதேபோல், ராஜபாளையத்தில் உள்ள அனைத்து தெருக்களில் கழிவுநீர் கால்வாய் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட போது சேதமடைந்தது. அதனை சரி செய்யாமல் விட்டதால் கழிவுநீர் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது.

எனவே கால்வாயை சீரமைத்து கழிவுநீர் தடையின்றி செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 21 July 2021 2:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இதயங்கள் என்னவோ வேறு வேறுதான்..! உன்னில் நான்; என்னில் நீ..!
  2. கோவை மாநகர்
    எப்போது தேர்தல் வந்தாலும் எடப்பாடியார் முதல்வராக வருவார் : எஸ்.பி....
  3. உலகம்
    அழகென்றால் இளமை மட்டும் இல்லை: 60 வயதில் அசத்தும் வழக்கறிஞர்
  4. சினிமா
    கருவில் கரைந்த எம்.ஜி.ஆர்., குழந்தை..!
  5. நாமக்கல்
    ப.வேலூர் அருகே வாலிபர் மர்ம மரணம்! போலீசார் தீவிர விசாரணை!
  6. லைஃப்ஸ்டைல்
    அக்காவுக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்துகள்..!
  7. நாமக்கல்
    மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மைத்துனரை தாக்கிய வாலிபர் கைது..!
  8. நாமக்கல்
    ஏ.மேட்டுப்பட்டி ஸ்ரீ ராமர் கோயிலில் உழவாரப்பணிகள் துவக்க விழா..!
  9. லைஃப்ஸ்டைல்
    வாழ்வில் வெற்றி பெற வழிகள்
  10. தேனி
    மாயாவதிக்கு பிரதமர் பதவி! பகுஜன் சமாஜ் கட்சி ஆசை!