/* */

மேலவரகுணராமபுரம் பள்ளியில் வரும்முன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம்

இராஜபாளையம் அருகே மேலவரகுணராமபுரம் நாடார் பள்ளியில் வரும்முன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் துவக்கம்.

HIGHLIGHTS

மேலவரகுணராமபுரம் பள்ளியில் வரும்முன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம்
X

மேலவரகுணராமபுரம் நாடார் உயர்நிலைப் பள்ளியில் வரும்முன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. 

இராஜபாளையம் அருகே மேலவரகுணராமபுரம் நாடார் உயர்நிலைப் பள்ளியில் வரும்முன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாமை சட்டமன்ற உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே ஜமின் நல்ல மங்களம் ஊராட்சி மன்றத்திற்க்கு உட்பட்ட மேலவரகுணராமபுரம் நாடார் உயர்நிலைப் பள்ளியில் தமிழக முதலவர் அறிவுறுத்தலின்படி முன்னால் முதல்வர் கலைஞர் அவர்களின் வரும்முன் காப்போம் திட்டத்தின் சிறப்பு மருத்துவ முகாமை சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன் மற்றும் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சிங்கராஜ் ஆகியோர் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.

இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற முதல் நாள் முதல் பல்வேறு சிறப்பான நடவடிக்கை மேற்கொண்டு கொரோனா இல்லாத தமிழகத்தை உருவாக்கியுள்ளார். அதுபோல் தற்போது புதியதாக ஓமிக்ரான் என்ற வைரஸ் பரவத் தொடங்கியுள்ள நிலையில் அத்தகைய வைரஸிலிருந்து தமிழக மக்களை பாதுகாக்க தமிழக முதல்வர் அவர்கள் போர்கால நடவடிக்கை மேற்கொண்டு தயாராக உள்ளார் எனக் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் தலைமை மருத்துவர் கருணாகரபிரபு பள்ளி தாளாளர் நச்சாடலிங்கம் மாவட்ட மீனவரணி அமைப்பாளர் நவமணி கிளை செயலாளர் பாலமுருகன் கருப்பையா மற்றும் கழக நிர்வாகிகள் மருத்துவர்கள் செவிலியர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 17 Dec 2021 2:24 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!