ராஜபாளையத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மினி மாரத்தான் போட்டி

ராஜபாளையத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மினி மாரத்தான் போட்டி
X

ராஜபாளையத்தில் நடைபெற்ற மினி மாரத்தான் போட்டியில் கலந்துகொண்ட மாணவிகள்.

சுற்றுச் சூழலை பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தி ராஜபாளையத்தில் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் இயங்கும் தன்னார்வ அமைப்பு மற்றும் தனியார் பள்ளி நிர்வாகம் சார்பில் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.

சுற்றுச் சூழலை பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் நோக்கில் நடைபெற்ற இந்த போட்டியில், அப்பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவிகள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

17 வயதுக்கு உட்பட்ட மாணவ, மாணவிகளுக்கான சூப்பர் சீனியர் மற்றும் 13 வயதுக்கு உட்பட்ட மாணவ, மாணவிகளுக்கான ஜூனியர் போட்டிகள் தனித் தனியாக நடத்தப்பட்டது. பள்ளி எதிரே இருந்து தொடங்கிய போட்டிகளை சிறப்பு விருந்தினர்கள் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.

முடங்கியாறு சாலையில் இருந்து 7 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அய்யனார் கோயில் அடிவாரம் வரை போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்களுடன் ரொக்க பரிசும் வழங்கப்பட்டது.

Tags

Next Story
Similar Posts
ஆன்லைன் பத்திரப்பதிவு சேவைக்கு login செய்வது எப்படி?
காரியாபட்டி பஸ் நிலைய விரிவாக்க பணிகள்: பேரூராட்சி உதவி இயக்குநர் ஆய்வு
திருச்சுழியில் பள்ளியில் சமூக விழிப்புணர்வு கூட்டம்
காரியாபட்டி அருகே நெடுஞ்சாலைத்துறை சார்பில்  சாலையோர மரம் நடும் திட்டம்..!
சாத்தூரில் சாலைப்பள்ளத்தில் குழந்தையுடன் தடுமாறி விழுந்த  பெண்கள்..!
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் இலவச பொது மருத்துவ முகாம்
சாலை விபத்து மூன்று பக்தர்கள் உயிரிழப்பு
விருதுநகர் அருகே முன்னாள் அமைச்சர் தங்கப் பாண்டியன் நினைவு நாள்
காரியாபட்டி அருகே புதிய ரேஷன் கடையை திறந்து வைத்த அமைச்சர் தங்கம் தென்னரசு
நீர் நிலைகளை பாதுகாப்பது நமது கடமை: ஆட்சியர்..!
விருதுநகர் மாவட்டம்  திருச்சுழியில்  ஆடித்தபசு விழா: பக்தர்கள் பரவசம்..!
திருத்தங்கல் பஸ் நிலையத்தை திறக்க கோரிக்கை..!
காரியாபட்டி; நூற்பாலை தொழிலாளர்களுக்கு சிறப்பு முகாம்
AI மரங்களை நடவு செய்வதில் புரட்சி: சரியான இடத்தை எப்படி கண்டுபிடிப்பது?