/* */

இராஜபாளையம் பகுதியில் வெறி நாய் கடித்து 8 பேர் காயம்: பொதுமக்கள் பீதி

இராஜபாளையம் மங்காபுரம் தெரு பகுதியில் தெரு நாய் வெறி பிடித்து அப்பகுதி மக்களை கடித்ததில் 8 பேர் காயமடைந்தனர்.

HIGHLIGHTS

இராஜபாளையம் பகுதியில் வெறி நாய் கடித்து 8 பேர் காயம்: பொதுமக்கள் பீதி
X

இராஜபாளையம் மங்காபுரம் தெரு பகுதியில் தெரு நாய் ஒன்று ரோட்டில் சென்ற பொது மக்களை விரட்டி விரட்டி கடித்ததில் 8 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இராஜபாளையம் மங்காபுரம் தெரு பகுதியில் தெரு நாய் வெறி பிடித்து அப்பகுதி மக்களை கடித்ததில் 8 பேர் காயம். நகராட்சி நிர்வாகம் தெருநாய் களுக்கு வெறிநோய் தடுப்பூசி பல ஆண்டுகளாக அளிக்கவில்லை என பொதுமக்கள் குற்றசாட்டு .

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் பலர் வளர்ப்பு பிராணிகளாக நாய்கள் வளர்க்கின்றனர். சிலர் சரியான கண்காணிப்பு இல்லாமல் நாய்களை தெருக்களில் சுற்ற விடுகின்றனர். தற்போது நகராட்சியில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் பொதுமக்கள் அச்சத்துடன் நடமாடுவதுடன், வாகன ஒட்டிகள் நாய்களால் விபத்துகளில் சிக்குகின்றனர்.

இந்நிலையில் இன்று இராஜபாளையம் மங்காபுரம் தெரு பகுதியில் தெரு நாய் ஒன்று ரோட்டில் சென்ற பொது மக்களை விரட்டி விரட்டி கடிக்க துவங்கியது. இந்த வெறிநாய் கடியில் ஒரே குடும்பத்தில் தாய் மகன் உட்பட 8 பேர் காயமடைந்து இராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும் போது, இராஜபாளையத்தில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது எனவும், இதனை கட்டுபடுத்தும் நகராட்சி நிர்வாகம் பல ஆண்டுகளாக தடுப்பூசி செலுத்த எவ்வித நடவடிக்கை எடுக்காததால் தெரு நாய்கள் வெறி பிடித்து மக்களை கடித்து வருகின்றது என தெரிவித்தனர். மேலும் சில நாய்கள் நோய் ஏற்பட்டு நோய் பரப்பும் விதமாக சுற்றி வருவதாக பொதுமக்கள் குற்றசாட்டு கூறுகின்றனர்.

Updated On: 5 Feb 2022 2:30 AM GMT

Related News

Latest News

  1. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  2. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  3. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  5. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  6. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  7. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  8. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  9. காஞ்சிபுரம்
    நீட் தேர்வில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு
  10. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!