/* */

வேலைக்கு சென்ற வாலிபர் மர்ம உயிரிழப்பு- உறவினர்கள் புகார்

வேலைக்கு சென்ற வாலிபர் மர்ம உயிரிழப்பு- உறவினர்கள் புகார்
X

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் காகித அட்டை தயாரிக்கும் கம்பெனி வேலைக்கு சென்ற வாலிபர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தில் இறந்தவரின் உறவினர்கள் சாலைமறியல் செய்தனர்.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பொன்னகரம் பகுதியை சேர்ந்தவர் சிதம்பரம்(45). இவர் இராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள தனியார் அடடை கம்பெனியில் கடந்த 20 ஆண்டுகளாக வேலை செய்து வருகிறார். வழக்கம்போல் வேலைக்கு சென்ற நிலையில் கீழே தவறி விழுந்து விட்டார். தொடர்ந்து அவரை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளோம் என வீட்டிற்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவல் அறிந்து அவரது உறவினர்கள் மருத்துவமனைக்கு சென்ற பொழுது அங்கு சிதம்பரம் இல்லை.

ஆனால் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்த போது சிதம்பரத்தின் உடலை வீட்டில் போட்டுவிட்டு கம்பெனி ஊழியர்கள் சென்றுள்ளார்கள். சிதம்பரம் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். உண்மையை மறைக்கும் நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், இறந்தவருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரி உறவினர்கள் இராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது விபத்தா அல்லது திட்டமிட்ட கொலையா என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Updated On: 23 March 2021 4:45 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு
  2. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  3. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  4. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  5. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  6. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  7. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  8. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  9. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  10. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...