/* */

தீ விபத்து- 1 லட்சம் மதிப்புள்ள வைக்காேல் நாசம்

தீ விபத்து- 1 லட்சம் மதிப்புள்ள வைக்காேல் நாசம்
X

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் வைக்கோல் படப்பில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ஆவரம்பட்டி கல்யாணசுந்தரனார் தெருவில் வசித்து வரும் ரெங்கசாமி என்பவர் கால்நடைதீவனத்திற்காக வைக்கோல் சேமித்து வைத்துள்ளார். இன்று நண்பகல் நேரத்தில் திடீரென வைக்கோல் படப்பில் தீப்பற்றியுள்ளது. இதனை கண்ட அப்பகுதி பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்து தண்ணீர் கொண்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

தகவலறிந்ததும் ராஜபாளையம் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்ததில், குறுகலான தெரு பகுதியில் வைக்கோல் சேமித்து வைக்கப்பட்டிருந்ததால் தீயணைப்பு வாகனம் செல்ல முடியாத நிலையில் குடியிருப்பு பகுதியில் கிடைக்கும் நீரினை கொண்டு சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் சுமார் ரூ. 1 லட்சம் மதிப்பிலான வைக்கோல் எரிந்து சாம்பலானது. மேலும் இது குறித்து வடக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 5 March 2021 11:45 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  2. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை மின்சார ரயில் அலைமோதும் மக்கள் கூட்டம்; கூடுதல்...
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  4. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  5. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  7. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  8. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  9. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  10. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது