/* */

குறு, சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் உரிமங்களை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்

விருதுநகர் மாவட்டகுறு, சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் அனைத்து உரிமங்களையும் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தகவல்

HIGHLIGHTS

குறு, சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் உரிமங்களை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்
X

விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.மேகநாதரெட்டி

விருதுநகர் மாவட்டத்தில் தொழில் வளர்ச்சியினை விரைவுபடுத்திட ஒற்றை சாளர முறையில் அனைத்து வகையான உரிமங்கள் மின் இணைப்புகள், ஒப்புதல்கள் ஆகியவற்றை பெற வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

தொழிற்கூடங்கள் நிறுவுவதற்கு தேவையான அனைத்து வகையான உரிமங்கள், மின் இணைப்புகள், ஒப்புதல்கள், தடையின்மை சான்றிதழ்கள் ஆகியவற்றை அரசுத் துறைகள், நிறுவனங்களிடமிருந்து உடனுக்குடன் பெற்றுக்கொள்ள, மாவட்ட தொழில் மையத்தின் மூலம் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் 'ஒரு முனை தீர்வுக் குழு" செயல்பட்டு வருகிறது. இக்குழு மூலம் தொழில் நிறுவனங்களுக்கு தேவையான அனுமதி உரிமங்கள் விரைவாக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதன் மூலம் தொழில் முனைவோர்கள் அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல் இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம். எனவே குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான அனைத்து உரிமங்களையும் www.tnswp.com என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

அரசு ஆணைப்படி புதிய தொழிற்கூடங்கள் நிறுவுவதற்கு தேவையான துறை சார்ந்த அனைத்து வகையான உரிமங்கள், ஒற்றை சாளர முறை வழியாக மட்டுமே வழங்கப்பட வேண்டும். இதை அத்துறை சார்ந்த தலைமை அலுவலர்கள் உறுதிபடுத்த வேண்டும். புதிய தொழில் முனைவோர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி சான்றிதழ்கள் மற்றும் உரிமங்களை பெற்றுக்கொள்ள வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், விருதுநகர் (04562-252739, 252308) என்ற முகவரியில் அணுகி பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.மேகநாதரெட்டி கேட்டுக்கொண்டுள்ளார்.

Updated On: 12 Aug 2021 5:00 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...
  3. செய்யாறு
    மணல் கடத்தலை தடுக்க கண்காணிப்பு குழுக்கள்: கோட்டாட்சியர் அறிவிப்பு
  4. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  6. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  7. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  9. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  10. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?