/* */

விழுப்புரம் ஆஞ்சநேயர் கோவில் லட்சதீபத்திருவிழா

விழுப்புரம் திரு.வி.க. வீதியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில் லட்சதீப திருவிழா இன்று தொடங்குகிறது

HIGHLIGHTS

விழுப்புரம் ஆஞ்சநேயர் கோவில் லட்சதீபத்திருவிழா
X

விழுப்புரம் ஆஞ்சநேயர் கோவில் குளம்

விழுப்புரம் திரு.வி.க. வீதியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில் லட்சதீப திருவிழா இன்று தொடங்குகிறது. இதனை தொடர்ந்து வருகிற 18-ந் தேதி வரை தினமும் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், இரவில் சாமிவீதி உலாவும், முக்கிய நிகழ்ச்சியாக 19-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) கோவில் குளத்தில் தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது.

இதையொட்டி தற்போது தெப்பக்குளம் சீரமைக்கப்பட்டு வருகிறது. குளத்தை சுற்றிலும் இருந்த முட்புதர்கள் அகற்றப்பட்டு குளத்தின் சுவர்களில் வர்ணம் தீட்டும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

மேலும் குளத்தில் தேங்கியிருந்த மாசடைந்த தண்ணீர் முற்றிலும் வெளியேற்றப்பட்டு மின் மோட்டார் மூலம் தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது. 2 ஆண்டுகளுக்கு பிறகு லட்சதீப திருவிழா நடப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குளத்தில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான எச்சரிக்கை பலகை குளத்தின் அருகில் கோவில் நிர்வாகம் சார்பில் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Updated On: 9 April 2022 11:54 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை இழந்தவர்களுக்கு அவர்களின் பிறந்தநாளில் செய்ய வேண்டியது என்ன?
  3. மாதவரம்
    புழல் மின் நிலையத்தில் திடீர் தீ விபத்து
  4. லைஃப்ஸ்டைல்
    காதல் நிறைந்த வாழ்க்கைப் பயணம்! கணவருக்கு திருமண ஆண்டுவிழா...
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு கணவருக்கு அன்பான ஆண்டுவிழா வாழ்த்துகள்!
  6. லைஃப்ஸ்டைல்
    அம்மாவின் பிறந்தநாளில், அன்பின் வெளிப்பாடுகள்!
  7. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,316 கன அடியாக அதிகரிப்பு
  8. திருநெல்வேலி
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. ஈரோடு
    பெருந்துறையில் வாகன சோதனையில் போதை மாத்திரை, கஞ்சா சாக்லேட் பறிமுதல்:...
  10. காஞ்சிபுரம்
    +1 தேர்வு முடிவுகள் : காஞ்சிபுரம் மாவட்டத்தில் 86.98% மாணவர்கள்...