மணலூர்பேட்டையில் காவலர்களுக்கு நன்றி தெரிவித்து பொதுமக்கள் சார்பாக போஸ்டர்

மணலூர்பேட்டையில் காவலர்களுக்கு நன்றி தெரிவித்து பொதுமக்கள் சார்பாக போஸ்டர்
X

போலீசாருக்கு நன்றி தெரிவித்து மேலந்தல் கிராமத்தில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்

திருட்டு வழக்கில் குற்றவாளியை சில நாட்களிலேயே கைது செய்த போலீசாருக்கு நன்றி தெரிவித்து மேலந்தல் கிராமத்தில் போஸ்டர் ஒட்டப்பட்டது

கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட மேலந்தல் கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டினுள் புகுந்து 18 பவுன் நகையை மர்ம நபர் திருடிச் சென்றார்.

இதுகுறித்து தனிப்படை போலீசார் வழக்கு பதிந்து, சம்பந்தப்பட்ட குற்றவாளியை சில நாட்களிலேயே கைது செய்து நகைகளை மீட்டனர். போலீசாரின் இந்த செயலை பாராட்டி அவர்களுக்கு நன்றி தெரிவித்து மேலந்தல் கிராம மக்கள் ஆங்காங்கே போஸ்டர் ஒட்டியுள்ளனர்

Tags

Next Story
ai healthcare products