/* */

விழுப்புரத்தில் மருத்துவ கழிவு சுத்திகரிப்பு ஆலை கழிவுகளால் பொதுமக்களுக்கு வாந்தி, மயக்கம்

வேடம்பட்டு கிராமத்தில் மருத்துவ கழிவு சுத்திகரிப்பு ஆலையிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகளால் வாந்தி மயக்கம் ஏற்பட்டு 17 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

HIGHLIGHTS

விழுப்புரத்தில் மருத்துவ கழிவு சுத்திகரிப்பு ஆலை கழிவுகளால் பொதுமக்களுக்கு வாந்தி, மயக்கம்
X

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கிராம மக்கள் 

விழுப்புரம் அருகே வேடம்பட்டு ஊராட்சியில் தனியாருக்கு சொந்தமான மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வேடம்பட்டு, நன்னாடு ஊராட்சியில் வசித்து வரும் பொதுமக்கள், பல்வேறு தொற்று நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

எனவே மருத்துவ கழிவு சுத்திகரிப்பு ஆலையை மூட நடவடிக்கை எடுக்க கோரி வேடம்பட்டு ஊராட்சியைச் சேர்ந்த பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் ஆலையை மூட மாவட்ட நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த வேடம்பட்டு ஊராட்சியைச் சேர்ந்த பொதுமக்கள் நாடாளுமன்ற தேர்தலை முழுவதுமாக புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் அந்த ஆலையில் இருந்து வெளியேறிய நச்சு காற்றால் வேடம்பட்டு கிராமத்தை சேர்ந்த 15க்கும் மேற்பட்ட மக்கள் வாந்தி, மயக்கம், மூச்சு திணறல் ஆகியவையால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் . மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் இந்த நிறுவனத்தை மூடக்கோரி தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும் அதனை அரசும், மாவட்ட நிர்வாகமும் கண்டுக்கொள்ளாமல் மக்களின் உயிரோடு அரசு விளையாடுவதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.

மருத்துவ கழிவு சுத்திகரிப்பு ஆலையால் பாதிக்கப்பட்டு கிராம மக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவது அக்கிராம மக்களிடையே அச்சத்தையும் பதற்றத்தையும் ஏற்ப்படுத்தியுள்ளது. இதனால் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க அக்கிராமம் முழுவதும் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

Updated On: 21 April 2024 3:51 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  2. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  4. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  5. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  6. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  8. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்
  9. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!
  10. காஞ்சிபுரம்
    ஆதிசங்கரரின் உபதேசங்களை மொழிபெயர்க்க வேண்டும்..!