/* */

வழிபாடு தொடர்பாக இரு தரப்பினரிடையே கருத்து வேறுபாடு: கலெக்டர் பேச்சுவார்த்தை

மேல்பாதி கிராமத்தில் உள்ள தர்மராஜா திரவுபதி அம்மன் கோவிலில் வழிபாடு தொடர்பாக இரு தரப்பினரிடையே கருத்து வேறுபாடு இருந்து வந்தது

HIGHLIGHTS

வழிபாடு தொடர்பாக இரு தரப்பினரிடையே கருத்து வேறுபாடு: கலெக்டர் பேச்சுவார்த்தை
X

கோலியனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மேல்பாதி கிராமத்தில் உள்ள தர்மராஜா திரவுபதி அம்மன் கோவிலில் வழிபாடு தொடர்பாக இரு தரப்பினரிடையே கருத்து வேறுபாடு இருந்து வந்தது.

இந்நிலையில், இருதரப்பினரிடையே அமைதி பேச்சுவார்த்தை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் பழனி தலைமையில் விழுப்புரம் தொகுதி எம்.பி. ரவிக்குமார், எம்.எல்.ஏ.க்கள் புகழேந்தி (விக்கிரவாண்டி) டாக்ட ர் லட்சுமணன் (விழுப்புரம்) சிவக்குமார் (மயிலம்) ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

இது குறித்து ஆட்சியர் பழனி செய்தியாளர்களிடம் கூறுகையில், கோலியனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மேல்பாதி கிராமத்தில் உள்ள தர்மராஜா -திரவுபதி அம்மன் க்கவில் வழிபாடு தொடர்பாக இரு தரப்பினரிடையே கருத்து வேறுபாடு இருந்து வந்தது. எனவே, இது தொடர்பாக ஏற்கனவே இரண்டு கட்ட பேச்சுவார்த்தை வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்றது.

தற்போது மூன்றாம் கட்ட பேச்சு வார்த்தை நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் நடைபெற்றது. பேச்சு வார்த்தையில் இரு தரப்பினரையும் அழைத்து சுமூக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இருதரப்பினரிடமும் கருத்துகள் கேட்கப்பட்டுள்ளது.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி, பொது இடத்தினை பயன்படுத்த அனைவருக்கும் உரிமை உண்டு, அதேபோல் சமூக நீதி கடைப்பிடித்தும் வழிபாட்டு உரிமையை நிலைநாட்டுவதும் சட்ட விதிகளில் ஒன்றாகும்.

பொதுவான ஊர் சம்மந்தப்பட்ட பிரச்சனை என்பதால், இரு தரப்பினரும் தங்கள் பிரச்னைகளை எவ்வாறு சுமூகமாக தீர்வு காணலாம் என அரசு வழிகாட்டுதலின் படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு தரப்பினரும் ஊர் பொதுமக்களிடம் கலந்தாலோசித்து சுமூக முடிவு எடுப்பதற்காக மூன்று நாட்கள் கால அவகாசம் கோரியுள்ளார்கள்.

இப்பேச்சுவார்த்தையின் மூலம் சுமூக தீர்வு ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளது என்றுகூறினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயசந்திரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) மோகன்ராஜ், திண்டிவனம் சப்-கலெக்டர் ரவி தேஜா, விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோவிந்தராஜ், ஸ்ரீதரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ஹரிதாஸ், விழுப்புரம் வட்டாட்சியர் வேல்முருகன், மேல்பாதி கிராம பொதுமக்கள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Updated On: 21 May 2023 8:16 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    தேனியில் 4வது நாளாக மழை! வைகை அணையில் நீர் திறப்பு!
  2. இந்தியா
    இணையம் என்ன டாக்டரா..? விழிப்பு வேணும்..!
  3. குமாரபாளையம்
    இரண்டு மணி நேர மழையால் நிலவிய குளிர்ச்சி! வீடு சேதம்!
  4. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் அம்மை நோய் ஏற்பட்டால் குணப்படுத்த என்ன செய்யலாம்?
  5. இந்தியா
    சர்வதேச செவிலியர் தினம்: இந்திய ராணுவம் கொண்டாட்டம்
  6. தொழில்நுட்பம்
    3டி அச்சிடப்பட்ட ராக்கெட் எஞ்சினை வெற்றிகரமாக சோதித்த இஸ்ரோ: 3டி...
  7. தொழில்நுட்பம்
    எலெக்ட்ரிக் பறக்கும் டாக்சி, e200..! ஐஐடி மெட்ராஸ் சாதனை..!
  8. லைஃப்ஸ்டைல்
    கோடை வெயிலிருந்து எலக்ட்ரானிக் சாதனங்களை பாதுகாப்பது எப்படி?
  9. ஈரோடு
    எடப்பாடி பழனிசாமி 70வது பிறந்த நாள்: பெருந்துறையில் நடமாடும் வாகனம்...
  10. வணிகம்
    விரைவில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வழக்கமான விமான சேவையை தொடரும்:...