/* */

உள்ளாட்சி தேர்தல்- விழுப்புரம் மாவட்டத்தில் 150 வேட்புமனுக்கள் நிராகரிப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் தாக்கல் செய்யப்பட்ட 24 ஆயிரம் வேட்புமனுக்களில் 150 வேட்புமனுக்கள் நிராகரிப்பு

HIGHLIGHTS

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக கடந்த 15-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. இதைத்தொடர்ந்து அந்த வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டது.

இதில் 28 மாவட்ட ஊராட்சி வார்டுகளுக்கு தாக்கல் செய்யப்பட்ட 241 வேட்பு மனுக்களில் 2 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 239 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

மேலும் 293 ஊராட்சி ஒன்றிய வார்டுகளுக்கு தாக்கல் செய்யப்பட்ட 2090 வேட்பு மனுக்களில் 29 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 2061 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

688 ஊராட்சிமன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட 4138 வேட்பு மனுக்களில் 39 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு 4099 வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

5,088 கிராம ஊராட்சி வார்டுகளுக்கு தாக்கல் செய்யப்பட்ட 17,531 வேட்பு மனுக்களில் 80 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 17,451 வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் பல்வேறு பதவிகளுக்குப் போட்டியிட 24 ஆயிரம் பேர் வேட்புமனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.

உரிய ஆவணங்கள் இல்லாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 150 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 23,850 வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

Updated On: 27 Sep 2021 6:28 AM GMT

Related News

Latest News

  1. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  2. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  4. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  5. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  6. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  7. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  8. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  9. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  10. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...