/* */

வேலூர் மாநகராட்சி அதிமுக வேட்பாளரை காணவில்லை: கலெக்டர் மற்றும் எஸ்.பி.யிடம் புகார்

வேலூர் மாநகராட்சி 11வது வார்டில் போட்டியிடும் வேட்பாளரை கண்டுபிடித்து தரக்கோரி கலெக்டர் மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி.யிடம் அதிமுகவினர் மனு

HIGHLIGHTS

வேலூர் மாநகராட்சி அதிமுக  வேட்பாளரை காணவில்லை:  கலெக்டர் மற்றும் எஸ்.பி.யிடம் புகார்
X

வேட்பாளரை கண்டுபிடித்து தரக்கோரி கலெக்டரிடம் மனு அளித்த அதிமுகவினர்

வேலூர் மாநகராட்சி 11வது வார்டு அதிமுக வேட்பாளர் சுகேந்திரன் தாக்கல் செய்த வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் தேர்தலையொட்டி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார்.

இந்நிலையில் நேற்று முதல் அவரை காணவில்லை எனவும் பல இடங்களில் தேடியும் செல்போனில் தொடர்பு கொண்டும் தொடர்பு கொள்ள இயலவில்லை எனவும் அதிமுகவினர் கூறினார்.

அமைச்சர் துரைமுருகன் தூண்டுதலின் பேரில் வேட்பாளரை திமுகவினர் விரட்டுவதாகவும், வேட்பாளரின் சகோதரர் மாநகராட்சியில் சுமார் 5 கோடி மதிப்பில் அவர் மேற்கொண்டு வரும் பணிகளை முடக்குவதாகவும் கூறினர்.

மேலும் நிலுவையில் உள்ள தொகையை அளிக்க முடியாது எனவும், இதனையும் மீறி செயல்பட்டால் கொலை செய்துவிடுவேன் என மிரட்டியதாக கூறப்படுகிறது

இதனையடுத்து அவரை கண்டுபிடித்து தரக்கோரி வேலூர் மாநகர மாவட்ட செயலாளர் அப்பு, வேலூர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் மற்றும் தேர்தல் பார்வையாளர் பிரதாப் வேலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் ஆகியோரிடம் காணாமல் போன வேட்பாளரை கண்டுபிடித்து தர கோரி புகார் மனு அளித்தனர்

அப்போது அதிமுக வேட்பாளர்கள் பலர் உடனிருந்தனர்

Updated On: 17 Feb 2022 11:45 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!