/* */

வாக்குமைய அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு துவக்கம்

வாக்குச்சாவடி மையத்தில் பணியாற்றும் அலுவலர்களுக்கான முதல் நிலை பயிற்சி வகுப்பை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

வாக்குமைய அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு துவக்கம்
X

வேலூர் மாவட்டத்தில் உள்ள 1783 வாக்குச்சாவடி மையங்களில் 8560 அலுவலர்கள் தேர்தல் நாளன்று பணியாற்ற உள்ளனர். இவர்கள் அன்றைய தினம் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்த முதல்நிலை பயிற்சி வகுப்பு வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளிலும் நடைபெற்றது. இதில் வேலூர் சாய்நாதபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெறும் பயிற்சி வகுப்பில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அலுவலர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

பயிற்சியில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் சண்முகசுந்தரம் கலந்து கொண்டு அறிவுரைகளை வழங்கினார். மேலும் கொரோனா பெருந்தொற்று காலம் என்பதால் கவனமாக பணியாற்ற வேண்டும், அதற்காக உரிய உபகரணங்கள் வழங்கப்படும். அதேபோல் வேலூரில் வெப்பம் அதிகம் இருக்கக்கூடும் என்பதால் பொது மக்கள் பாதிக்காத வகையில் அனைத்து வாக்குப்பதிவு மையத்திலும் நிழற்குடைகள், தண்ணீர் வசதி உள்ளிட்டவற்றை செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

மேலும் இதுவரை கொரோனா தடுப்பூசி போடாதவர்களுக்கு பயிற்சி மையத்திலேயே பரிசோதனை செய்து கோரோனா தடுப்பூசி போடப்பட்டது.

Updated On: 21 March 2021 11:26 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    அனைத்து மாவட்ட பதிவாளர்களுக்கு பத்திரப்பதிவு துறை தலைவர் சுற்றறிக்கை
  2. இந்தியா
    ஸ்டாலின் கைது செய்யப்படுவார்: கெஜ்ரிவால் திடீர் கண்டு பிடிப்பு
  3. வீடியோ
    மூன்று வருட திமுக ஆட்சி நிறைவு | சவுக்கு சங்கர் கைது | மக்களின் மனநிலை...
  4. இந்தியா
    4ம் கட்டமாக 96 நாடாளுமன்ற தொகுதி, ஆந்திர சட்டசபைக்கு நாளை தேர்தல்
  5. கல்வி
    ஆசிரியர் பணி கலந்தாய்வு தொடர்பாக பள்ளி கல்வி துறை இயக்குனரகம்...
  6. கல்வி
    கல்லூரி சேர்க்கையில் வெளிமாநில மாணவர்களால் பாதிப்பா?
  7. நாமக்கல்
    நீர்நிலைகளை மறைத்து சிப்காட்: தடுப்பு அணையில் நின்று விவசாயிகள்...
  8. தொழில்நுட்பம்
    இ-காமர்ஸ் சுரண்டல் அட்டை..! புதிய மோசடி..! உஷார் மக்களே..!
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்