/* */

வேலூர் பழைய பஸ்நிலையத்தில் முககவசம் அணியாத 109 பேருக்கு கொரோனா பரிசோதனை

வேலூர் பழைய பஸ்நிலையத்தில் முககவசம் அணியாமல் பஸ் ஏற வந்த பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

HIGHLIGHTS

வேலூர் பழைய பஸ்நிலையத்தில் முககவசம் அணியாத 109 பேருக்கு கொரோனா பரிசோதனை
X

வேலூர் மாநகராட்சி பகுதியில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ்நிலையங்கள், மார்க்கெட், பஜார் உள்ளிட்ட இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

அதைத்தவிர பொதுஇடங்களில் முககவசம் அணியாத நபர்கள், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்கள், கடைகள், ஓட்டல், வணிகவளாகங்களில் கொரோனா தடுப்பு விதியை பின்பற்றாதவர்களுக்கு மாநகராட்சி ஊழியர்கள் அபராதம் விதித்து வருகிறார்கள். ஆனாலும் பலர் கொரோனா பரவல் அச்சமின்றி பொதுஇடங்களில் முககவசம் அணியாமல் சுற்றித்திரிவதாக மாநகராட்சி நிர்வாகத்துக்கு புகார்கள் வந்தன.

அதையடுத்து முககவசம் அணியாத நபர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யும்படி மாநகராட்சி கமிஷனர் சங்கரன் உத்தரவிட்டார். அதன்பேரில் 2-வது மண்டலத்துக்கு உட்பட்ட பழைய பஸ்நிலையத்தில் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. இதில், முககவசம் அணியாமல் பஸ் ஏற வந்த பயணிகள் மற்றும் அந்த வழியாக பிற இடங்களுக்கு சென்ற பொதுமக்கள், மோட்டார் சைக்கிளில் சென்றவர்களை சுகாதார அலுவலர் சிவக்குமார் தலைமையிலான மாநகராட்சி ஊழியர்கள் மடக்கி அவர்களுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் முககவசம் அணியாமல் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று அறிவுரை கூறி, மாநகராட்சி சார்பில் முககவசம் ஒன்று வழங்கப்பட்டது.

கொரோனா பரிசோதனை செய்ய மறுத்தவர்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டு, உடனடியாக வசூல் செய்யப்பட்டது. இந்த சிறப்பு முகாமில் முக கவசம் அணியாத 109 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. 44 பேருக்கு ரூ.200 வீதம் ரூ.8,800 அபராதம் விதிக்கப்பட்டு வசூல் செய்யப்பட்டது என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 23 Aug 2021 2:51 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?