/* */

வேலூரில் மேலும் 7 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு

வேலூரில் மேலும் 7 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 79 ஆக உயர்ந்துள்ளது.

HIGHLIGHTS

வேலூரில் மேலும் 7 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு
X

கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டவர் 

வேலூர் மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தொற்று பாதித்து குணமடைந்தவர்கள் மற்றும் சிகிச்சையில் இருப்பவர்களை கருப்பு பூஞ்சை நோய் தாக்குகிறது. ஸ்டீராய்டு சிகிச்சை எடுத்துக் கொள்பவர்கள் மற்றும் சர்க்கரை நோயாளிகளை இந்த நோய் எளிதில் தாக்குவதாக கண்டறியப்பட்டுள்ளது.

கருப்பு பூஞ்சை நோய் பாதித்தவர்கள் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 15 பேர் வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள். மீதம் உள்ளவர்கள் பிற மாவட்டம், பிற மாநிலங்களை சேர்ந்தவர்கள்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பாதிப்பு 72 ஆக இருந்தது. தற்போது மேலும் 7 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 79 ஆக உயர்ந்துள்ளது. தற்போது அவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

Updated On: 3 Jun 2021 6:45 AM GMT

Related News

Latest News

  1. ஒட்டன்சத்திரம்
    மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் மூன்று மடங்கு உயர்ந்த எலுமிச்சை...
  2. சோழவந்தான்
    மதுரை அருகே எடப்பாடி பழனிசாமி பிறந்த நாள் விழாவில் வழங்கப்பட்ட...
  3. திருப்பரங்குன்றம்
    மதுரை உலக அன்னையர் தின விழாவில் நடந்த உணவு வழங்கல் நிகழ்ச்சி
  4. காஞ்சிபுரம்
    ‘எடப்பாடி பழனிசாமி தலைமையில் தான் அதிமுக இயங்கும்’- செங்கோட்டையன்
  5. லைஃப்ஸ்டைல்
    அக்கா உன் மகிழ்ச்சியான வாழ்க்கை எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி..!
  6. வீடியோ
    போதை பொருள் விற்பனையை தடுக்க வேண்டியது யார் ? #drugmafia #drugs #dmk...
  7. நாமக்கல்
    வெள்ளாளப்பட்டி பகவதியம்மன் தேர் திருவிழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு
  8. காஞ்சிபுரம்
    மூன்றே மாதம்தான் பயணியர் நிழற்கூரை பூச்சு பெயர்ந்து விழுந்தது...!
  9. வீடியோ
    அரசியலை தொழிலாக செய்யும் அரசியல்வாதிகள் !போதை பொருள் தொழிலா? #public...
  10. வீடியோ
    திராவிட மாடலை காரி துப்பும் சாமானியர் ! #dmk #mkstalin #public...