/* */

வெயிலை சமாளிக்க பறவைகளுக்கு தண்ணீர் வைத்த சமூக ஆர்வலர்கள்

சுட்டெரிக்கும் வெயிலை சமாளிக்க வேலூரில் சமூக ஆர்வலர்கள் பறவைகளுக்கு தண்ணீர் வைத்தனர்.

HIGHLIGHTS

வெயிலை சமாளிக்க  பறவைகளுக்கு தண்ணீர் வைத்த சமூக ஆர்வலர்கள்
X

மரங்களில் பறவைகளுக்கு பிளாஸ்டிக் டப்பாக்களில் நீர் வைக்கும் சமூக ஆர்வலர்கள் 

வேலூரில் வெப்பத்தின் அளவு, அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதிகப்படியான வெப்பம், தண்ணீர் தாகத்தால் சில நேரங்களில் மனிதர்கள் உயிரிழக்கும் அபாயம் உள்ளது.

மனிதர்களாலேயே தாங்க முடியாத வெப்பத்தை, சிறிய பறவைகள் எப்படி தாங்கும்?; வெயிலின் தாக்கம் காரணமாக பறவைகள், வனவிலங்குகளின் உயிரிழப்புகள் அடிக்கடி நடக்கின்றன.

உணவில்லாமல் கூட ஒரு சில நாட்கள் வாழலாம். ஆனால், தண்ணீர் இல்லாமல் வாழவே முடியாது என்பது, உலகம் அறிந்த உண்மை. இது மனிதர்களுக்கு மட்டுமல்லாமல், அனைத்து உயிர்களுக்கும் பொருந்தும்.

எனவே பறவைகளுக்கு தண்ணீர் வைப்பது ஒரு சிறிய முயற்சி தான். நமது சுற்றுப் புறங்களில் பறவைகளின் நடமாட்டத்தை கண்காணித்து, சிறிய குவளைகளில் தண்ணீர் வைக்கலாம்.

வேலூர் சத்துவாச்சாரி பகுதியில் மரங்களில் டப்பாக்களை கட்டி சமூக ஆர்வலர்கள் பறவைகளுக்கு தண்ணீர் வைத்து வருகின்றனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், பறவைகளுக்கு தண்ணீர் வைத்தபின், அவை வந்து பருக ஓரிரு நாட்கள் ஆகலாம். பழக்கமாகி, தண்ணீர் அருந்த வரும்போதும், தண்ணீர் அருந்திவிட்டு செல்லும் போதும் நாம் கவனிக்க தொடங்கினால், அதில் ஏற்படுகிற இன்பம் அலாதியானது. இதை அனுபவித்தால் மட்டுமே உணரமுடியும்.

வீடுகளில் தண்ணீர் வைப்பவர்கள், முயன்றவரை மண் சட்டியில் வைப்பது நல்லது. மண்சட்டியில் நீர் வைத்தால், அது வெகு நேரத்திற்கு குளிர்ச்சியாக இருக்கும். பறவைகள் அதில் முங்கி குளித்து, உடல் சூட்டை தணித்துக் கொள்ளும்.

பிளாஸ்டிக் குவளைகளில் தண்ணீர் வைப்பதாக இருந்தால், அதன்மீது வெயில் படாமல், நிழலில் வைப்பது நல்லது என்றனர்.

Updated On: 4 May 2022 12:50 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தொப்புள்கொடி பிணைக்கும் பாச அலைக்கற்றை, சகோதரி பாசம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    பாக்கெட் தயிர் சாப்பிடுவது ஆரோக்கியமானதா?
  3. லைஃப்ஸ்டைல்
    அச்சம் என்ற மடமையை விரட்டுங்க...!
  4. லைஃப்ஸ்டைல்
    மாதம்பட்டி ரங்கராஜன் ஸ்டைல் மா இஞ்சி தொக்கு செய்வது எப்படி?
  5. இந்தியா
    மும்பை அருகே குடிபோதையில் பெண்கள் அமளி!
  6. லைஃப்ஸ்டைல்
    காற்றுக்காதலனின் அணைப்பால், மேக காதலியின் ஆனந்தக்கண்ணீர், மழை..!
  7. நாமக்கல்
    10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் நாமக்கல் குறிஞ்சி பள்ளி மாணவர்கள் சாதனை
  8. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் 8.400 கிலோ கஞ்சா பறிமுதல் ; தந்தை, மகன் கைது
  9. லைஃப்ஸ்டைல்
    மனமே உனக்கான நண்பனும் எதிரியும்..!
  10. மேட்டுப்பாளையம்
    கல்லாறு சோதனை சாவடியில் தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா, இ-பாஸ் ஆய்வு..!