/* */

கோவில் நகைகளை உருக்குவதற்கு இந்து முன்னணி எதிர்ப்பு

கோவில் நகைகளை உருக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிற 26-ந் தேதி தமிழகம் முழுவதும் இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

HIGHLIGHTS

கோவில் நகைகளை உருக்குவதற்கு இந்து முன்னணி எதிர்ப்பு
X

கோவில் நகைகளை உருக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி பேரணி 

இந்து கோவில்களில் உள்ள நகைகளை உருக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி சார்பில் தமிழகம் முழுவதும் பிரச்சார பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி வேலூரில் கிரீன் சர்க்கிள் பகுதியில் இருந்து செல்லியம்மன் கோவில் வரை ஊர்வலமாக சென்றனர். செல்லும் வழியில் பொதுமக்களிடம் கோரிக்கை அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி, முழக்கங்களை எழுப்பினர்.

இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய இந்து முன்னணியின் மாநில தலைவர் சுப்பிரமணியம், செய்தியாளர்களிடம் கூறுகையில்,

அமைச்சர் சேகர்பாபு இந்து கோவிலுக்கு சொந்தமான நகைகள் உருக்கப்படும் என அறிவித்துள்ளார். இதை கண்டித்து சென்னை, வேலூரில் பிரசார யாத்திரை நடத்தப்பட்டது.. இனி திருச்சி, மதுரை, சேலம், கோவை உள்ளிட்ட பகுதிகளிலும் பிரசார பயணம் மேற்கொள்ளப்படும். சாமி நகைகளை உருக்க அரசுக்கு அதிகாரம் இல்லை. இதுகுறித்து ஐகோர்ட்டு வழிகாட்டுதல்கள் தெரிவித்துள்ளது. கோவில்களில் உள்ள நகைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என கோர்ட்டு அறிவுறுத்தி உள்ளது.

ஆனால் அரசு கோவில் நகை குறித்த தகவல் இல்லை. நன்கொடை குறித்த கணக்கும் இல்லை. ஒரேநாளில் கோவில் நகை குறித்து கணக்கெடுக்க வேண்டும் என அரசு கூறுகிறது. இவ்வாறு அவசரப்பட்டால், ஊழல் நடைபெற வாய்ப்பு உள்ளது. கோவில்களில் உள்ள நகை, பணம் குறித்த விவரத்தை அரசு வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும். கோவில் நகைகளை உருக்குவதை கண்டித்தும், இந்த திட்டத்தை கைவிடக்கோரியும் தமிழகம் முழுவதும் வருகிற 26-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என்று கூறினார்.

Updated On: 18 Oct 2021 9:17 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது