/* */

வேலூர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஆக்சிஜன் தரும் மரங்களை வளர்க்க கோரிக்கை

வேலூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஆக்சிஜன் தரும் மரங்களை வளர்க்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.

HIGHLIGHTS

வேலூர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஆக்சிஜன் தரும் மரங்களை வளர்க்க கோரிக்கை
X

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் சாலை விரிவாக்கம் , புதிய அரசு கட்டிடங்கள் கட்டுவதற்கு என்று பல்வேறு பணிகளுக்காக மரங்கள் வெட்டப்படுகிறது . அதேபோல் வேலூர் மாநகராட்சியில் ரூபாய்1,000 கோடி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் , ஸ்மார்ட் பஸ் நிலையம் , ஸ்மார்ட் பார்க்கிங் , ஸ்மார்ட் சாலை , பாதாள சாக்கடை திட்டம் , கோட்டையை அழகுபடுத்தி ஒலி , ஒளி பூங்கா அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது . இதில் ஸ்மார்ட் சாலை , ஸ்மார்ட் பஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக மரங்கள் வெட்டப்பட்டது .

அதே போல் சாலையோரங்களில் உள்ள மரங்களினால் தங்களது கடைகளுக்கு இடையூறாக உள்ளது என்று தனிநபர்கள் ஆங்காங்கே உள்ள புளிய மரங்களையும் வெட்டி அகற்றும் சம்பவங்கள் நடக்கிறது . இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை.

எனவே மத்திய அரசின் ரூபாய்1,000 கோடியில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் மேற்கொள்ளப்படும் வேலூர் மாநகராட்சியில், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக , ஆக்சிஜன் தரும் மரங்களை வளர்க்க மாவட்ட நிர்வாகமும் , மாநகராட்சியும் நடவடிக்கை எடுக்க வேண்டும் . மாநகராட்சி பகுதிகள் மட்டுமின்றி மாவட்டம் முழுவதும் அரசு இடங்களில் மரங்களை வளர்க்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்

Updated On: 3 Jun 2021 12:14 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. கோவை மாநகர்
    11 ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த கோவை
  3. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை இழந்தவர்களுக்கு அவர்களின் பிறந்தநாளில் செய்ய வேண்டியது என்ன?
  4. மாதவரம்
    புழல் மின் நிலையத்தில் திடீர் தீ விபத்து
  5. சேலம்
    மேட்டூர் அணை நீர்வரத்து 138 கன அடியாக அதிகரிப்பு
  6. லைஃப்ஸ்டைல்
    காதல் நிறைந்த வாழ்க்கைப் பயணம்! கணவருக்கு திருமண ஆண்டுவிழா...
  7. லைஃப்ஸ்டைல்
    அன்பு கணவருக்கு அன்பான ஆண்டுவிழா வாழ்த்துகள்!
  8. லைஃப்ஸ்டைல்
    அம்மாவின் பிறந்தநாளில், அன்பின் வெளிப்பாடுகள்!
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,316 கன அடியாக அதிகரிப்பு
  10. திருநெல்வேலி
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்