/* */

வேலூர் மாவட்டத்தில் விபத்துக்களை தடுக்க மேம்பாலம்: எம்பி கதிர் ஆனந்த்

வேலூர் மாவட்டத்தில் விபத்துக்களை தடுக்க மேம்பாலம் அமைக்கப்படும் என சத்துவாச்சாரி சுரங்கபாதையை துவங்கி வைத்த எம்பி கதிர் ஆனந்த் கூறினார்

HIGHLIGHTS

வேலூர் மாவட்டத்தில் விபத்துக்களை தடுக்க மேம்பாலம்: எம்பி கதிர் ஆனந்த்
X

வேலூர் சத்துவாச்சாரியில் சுரங்கபாதையை துவங்கி வைத்த நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் 

வேலூரில் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சத்துவாச்சாரி தேசிய நெடுஞ்சாலையை கடப்பதற்கு மக்கள் பெரிதும் பாதிப்படைந்தனர். இதனால் ரூ..1. 20 கோடி மதிப்பில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு, ஓராண்டு காலத்தில் பணி நிறைவடைந்து அதனை இன்று வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். இந்த விழாவில்வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்

பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்த சுரங்கபாதை 15 ஆண்டுகளாக மக்கள் கோரிக்கையை அடுத்து நிறைவேறியது, இதே போன்று தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்தை தடுக்க கந்தனேரி,,வெட்டுவானம், மற்றும் ஆம்பூர் பைபாஸ் ராஜுவ் காந்தி சிலை அருகில் விரைவில் மேம்பாலம் அமைக்கப்படும். அதற்காக அடிக்கல் நாட்டப்படும்,

மத்தியில் எந்த அரசு இருந்தாலும் மக்கள் நலனுக்காக திமுக வாதாடி திட்டங்களை பெறுகிறோம். அந்த வகையில் குடியாத்தத்தில் ரூ.221 கோடி மதிப்பில் சுற்றுசாலை அமைக்கும் பணிகள் நடைபெறவுள்ளது. மேலும் மாவட்டத்தில் மத்திய அரசிடம் தேவையான அனைத்து நலத்திட்டங்களை கேட்டு பெற்றுவருகிறோம். காட்பாடி ரயில்வே மேம்பாலம் கூடுதல் மேம்பாலம் அமைக்கவும் மத்திய அரசிடம் கேட்டுள்ளோம். பழைய பாலமும் சீரமைக்கப்படவுள்ளது என்று கூறினார்

Updated On: 26 Jan 2022 10:30 AM GMT

Related News

Latest News

  1. ஆரணி
    தோல்வி பயத்தில் பாஜகவினர்: செல்வப் பெருந்தகை பேட்டி
  2. வீடியோ
    குலதெய்வம் ஒரு குடும்ப உறுப்பினர் இயக்குநர் Perarasu உருக்கம்...
  3. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  4. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  5. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  6. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  7. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  9. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  10. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?