லாரி ஓட்டுனரை ஏமாற்றி 5 ஆயிரம் பணம் பறித்த 5 திருநங்கைகள்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் கிராமத்தை சேர்ந்தவர் லாரி ஓட்டுனர் வேல்முருகன் (வயது 43). இவர் நேற்று முன்தினம் சென்னையில் இருந்து லாரியில் பொருட்களை ஏற்றிக் கொண்டு பெங்களூர் நோக்கி செல்லும் போது வேலூர் அடுத்த பொய்கை ஆரம்ப சுகாதார நிலையம் அருகே லாரியை நிறுத்திவிட்டு, அப்பகுதியில் நின்றுள்ளார். அப்போது அங்கு வந்த திருநங்கைகள் 5 பேர் வேல்முருகனிடம் லாரியை ஓட்டிச் செல்லும்போது விபத்துகள் நடக்காமல் இருக்க மந்திரம் போடுவதாக கூறி அவரிடம் இருந்த ரூ.5 ஆயிரத்தை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இது குறித்து வேல்முருகன் விரிஞ்சிபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் ஆய்வாளர் அல்லிராணி, சிறப்பு உதவி ஆய்வாளர் வெங்கடேசன் மற்றும் காவல் துறையினர் திருநங்கைகளான தன்ஷிகா, பிரியா உட்பட 5 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu