/* */

வேலூரில் கருப்பு பூஞ்சை நோய்க்கு 102 பேர் சிகிச்சை

வேலூரில் கருப்பு பூஞ்சை நோய்க்கு 102 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்

HIGHLIGHTS

வேலூரில் கருப்பு பூஞ்சை நோய்க்கு 102 பேர் சிகிச்சை
X

வேலூர் மாவட்டத்தில் பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தொற்று பாதித்து குணமடைந்தவர்கள் மற்றும் சிகிச்சையில் இருப்பவர்களை மியூகோர்மைகாசிஸ் எனப்படும் கருப்பு பூஞ்சை நோய் தாக்குகிறது.

ஸ்டீராய்டு சிகிச்சை எடுத்துக் கொள்பவர்கள் மற்றும் சர்க்கரை நோயாளிகளை இந்த நோய் எளிதில் தாக்குவதாக கண்டறியப்பட்டுள்ளது. கருப்பு பூஞ்சை நோய் பாதித்தவர்கள் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல், பிற மாவட்டம், பிற மாநிலங்களை சேர்ந்தவர்களும் அதிகளவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை பாதிப்பு எண்ணிக்கை 79 ஆக இருந்தது. ஆனால் தற்போது இங்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், கொரோனா வைரஸ் போன்று கருப்பு பூஞ்சை நோயும் மக்களை அச்சுறுத்துகிறது. இந்த நோய் பாதித்தவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறை, பாதிப்பின் தீவிரம் குறித்து கண்காணிக்கப்படுகிறது. இதுவரை மாவட்டத்தில் 102 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றனர்.

Updated On: 10 Jun 2021 2:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு