/* */

அமமுக பிரமுகர் கொலை வழக்கில் 3 பேர் சரண்டர்

திருப்பத்தூரில் அமமுக பிரமுகர் வெட்டிகொலை செய்யப்பட்ட வழக்கில், ஏற்கனவே 10 பேர் கைது செய்யப்பட்டனர். இந் நிலையில் தேடப்பட்ட 3 பேர் வேலூர் நீதிமன்றத்தில் சரண்டர் ஆனார்கள்.

HIGHLIGHTS

அமமுக பிரமுகர்  கொலை வழக்கில் 3 பேர் சரண்டர்
X

திருப்பத்தூர் கௌதமபேட்டை பகுதியை சேர்ந்தவர் மாவட்ட அமமுக மாணவரணி செயலாளரான வானவராயன்(30). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த திமுக பிரமுகரான சங்கர் என்பவருக்கும் இடையேயான முன்விரோதம் காரணமாக கூலிப்படை மூலம் கடந்த 15.02.2021 ம் தேதி வெட்டி கொலை செய்யப்பட்டார். இக்கொலை தொடர்பாக சங்கர் மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த பெண்கள் உட்பட 7 பேரை திருப்பத்தூர் காவல் துறையினர் கைது செய்தனர்.


மேலும் தலைமறைவாக இருந்த கூலிப்படையை சேர்ந்தவர்களை காவல் துறை தேடி வந்த நிலையில் 3 பேர் பெங்களூருவில் கைது செய்யப்பட்டர். மேலும் தலைமறைவாக இருந்த கௌதமபேட்டையை சேர்ந்த பிரபா(எ) பிரபாகரன்(39), இவனது தம்பி அரவிந்தன்(26), ரபீக் (எ) நந்தகுமார்(25) ஆகியோர் இன்று (22.02.2021) வேலூர் மாவட்ட நீதித்துறை நடுவர் நீதிமன்றம் 1-ல் சரணடைத்ததனர். இதனையடுத்து 3 பேரும் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் வரும் 25-ம் தேதி திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த நீதிபதி உத்தர விட்டார்.

Updated On: 22 Feb 2021 4:01 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  2. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  4. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  5. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  7. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  8. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்
  9. லைஃப்ஸ்டைல்
    தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களும் பாரம்பரிய கொண்டாட்டங்களும்
  10. லைஃப்ஸ்டைல்
    விநாயகர் சதுர்த்தியில் வாழ்த்து தெரிவிக்கும் பல வழிகள்