/* */

வேலூர் மாவட்டத்தில் 193 பதற்றமான வாக்கு சாவடியில் துணை ராணுவம் பாதுகாப்பு

வேலூர் மாவட்டத்தில் 193 வாக்குச்சாவடியில் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 1013 மையங்கள் சிசிடிவி வெப் கேமிரா மூலம் கண்காணிக்கப்பட உள்ளன- என வேலூர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் தெரிவித்தார்.

HIGHLIGHTS

வேலூர் மாவட்டத்தில் 193 பதற்றமான  வாக்கு சாவடியில் துணை ராணுவம் பாதுகாப்பு
X

வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதில் பதற்றமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்ட 193 வாக்குச்சாவடிகளை வேலூர் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான சண்முகசுந்தரம், எஸ்.பி செல்வகுமார் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்து அங்கு மேற்க்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். பின்னர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் சண்முகசுந்தரம் அளித்த பேட்டியில் கூறியதாவது.

வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் 1753 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதில் 193 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளது. அங்கெல்லாம் தற்போது நேரில் ஆய்வு மேற்க்கொண்டு வருகிறோம். பதற்றமான வாக்குச்சாவடிகளில் பொது மக்கள் எந்தவிதமான பதற்றத்திற்க்கும் உள்ளாகாமல் வாக்களிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் பதற்றாமான வாக்குச்சாவடிகளில் மத்திய துணை ரணுவத்தினர், தேர்தல் நுண் பார்வையாளர்கள் போடப்பட்டுள்ளனர்.

மேலும் 1013 வாக்குச்சாவடி மையங்கள் சிசிடிவி வெப் கேமிரா மூலம் கண்காணிக்கப்பட உள்ளது. இது தவிர தமிழ்நாடு காவல் துறையில் உள்ள காவலர்களை கொண்டு குய்க் ரியாக்சன் (னிஹிமிசிரி ஸிணிகிசிஜிமிளிழி ஜிணிகிவி) டீம் குழுவை உருவாக்க இருப்பதாகவும். மாவட்டம் முழுவதும் 5 மாதிரி வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட உள்ளது. ஆகவே எதிர்வரும் ஏப்ரல் 6 சட்டமன்ற பொது தேர்தல் எந்தவித அசம்பாவிதங்கள் இன்றி சுமூகமாக நடைபெற மாவட்ட நிர்வாகம் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்க்கொண்டு வருவதாக கூறினார்.




Updated On: 20 March 2021 10:30 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    தன்மானம் சீண்டப்படும்போது..துணிந்து நில்லுங்கள்..!
  2. தேனி
    தேனி சமதர்மபுரம் நாடார் மண்டகப்படி திருவிழா..!
  3. லைஃப்ஸ்டைல்
    கருத்து கந்தசாமிகளே..நீங்களும் இதை படிங்க...!
  4. லைஃப்ஸ்டைல்
    விநாயகருக்குப் பிடித்த விருந்துகள்: சதுர்த்தி ஸ்பெஷல் படையல் செய்வது...
  5. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. ஆன்மீகம்
    “மின்சாரம் வேறு மின்சார பல்புகள் வேறு” யார் சொன்னது..?
  8. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றும் பெருவிழாவும் மகளிர் தின வாழ்த்துக்களும்
  9. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துக்கள்: தமிழில் நம்பிக்கையின் ஒளி
  10. வீடியோ
    🔴LIVE : சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு புகார் வீரலட்சுமி பரபரப்பு...