Begin typing your search above and press return to search.
வருவாய் கிராம ஊழியர்கள் போராட்டம்
15 அம்ச கோரிக்கையை முன்வைத்து ஆட்சியர் அலுவலகம் எதிரே வருவாய் கிராம ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்.
HIGHLIGHTS
வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத்தை வழங்க வேண்டும், கிராம நிர்வாக அலுவலர் பதவி உயர்வை 20% இருந்து 30% உயர்த்த வேண்டும், தங்கள் கோரிக்கைகள் குறித்து அரசு எங்களை விரைவில் அழைத்து பேச வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கையை முன் வைத்து திருப்பத்தூர், ராணிப்பேட்டை என ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர்கள் சங்கத்தினர் சார்பில் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே கவன ஈர்ப்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.