/* */

போக்குவரத்து தொழிலாளர்கள் பிச்சை எடுக்கும் போராட்டம்

போக்குவரத்து தொழிலாளர்கள் பிச்சை எடுக்கும் போராட்டம்
X

வேலூரில் போக்குவரத்து தொழிலாளர்கள் நாமம் போட்டு பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் வேலூர் மாவட்டத்தில் பெரும்பாலான அரசு பேருந்துகள் ஓடவில்லை. இந்நிலையில் வேலூர் கிருஷ்ணா நகர் போக்குவரத்து பணிமனை முன்பு இன்று காலை போக்குவரத்து தொழிலாளர்கள் நாமம் போட்டு பொதுமக்களிடம் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவிந்தா, கோவிந்தா என தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். அரசு தங்களது கோரிக்கைகளை காது கொடுத்து கேட்கவில்லை. அதனால் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

Updated On: 26 Feb 2021 10:15 AM GMT

Related News

Latest News

  1. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    உலகில் எந்தெந்த நாட்டு காவல்துறைக்கு காக்கி யூனிஃபார்ம் தெரியுமா?
  3. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, பலத்த மழையால், விலை போகாத வெள்ளரிக்காய்..!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவர்களுக்கு திருமணநாள் வாழ்த்துகள்..!
  5. திருமங்கலம்
    ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் குளியல் : மாவட்ட நிர்வாகம் கண்டு
  6. அண்ணா நகர்
    சென்னையில் ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்க துறை அதிகாரிகள் நேரடி...
  7. லைஃப்ஸ்டைல்
    சமையல் அறையில் கை 'சுட்டதா'? என்ன செய்வது?
  8. உலகம்
    உலகின் கடைசி நகரம் எது தெரியுமா?
  9. தமிழ்நாடு
    வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 7 ஆயிரமாக உயர்வு
  10. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவிக்கு, திருமண நாள் வாழ்த்துக்கள்!