/* */

கொரோனா சான்று வழங்க தாமதம்- அரசு மருத்துவமனை முற்றுகை

கொரோனா சான்று வழங்க தாமதம்- அரசு மருத்துவமனை முற்றுகை
X

இராணுவ ஆள் சேர்ப்பு முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு கொரோனா சான்று வழங்குதில் தாமதமானதால் வேலூர் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு இளைஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

நாளை (15 ம் தேதி) திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெறும் இந்திய இராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாமில் கலந்து கொள்ள கொரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழ் கட்டாயம் என்பதால் ஆள் சேர்ப்பு முகாமில் பங்கேற்க செல்லும் இளைஞர்கள் அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சோதனை கொடுத்துள்ளனர். ஆனால் சோதனை முடிவு இரவு ஆகியும் கொடுக்கப்படவில்லை என்றும் இதனால் தாங்கள் ஆள்சேர்ப்பு முகாமிற்கு செல்வது தடைபடக்கூடும்.

எனவே தங்களுக்கு உடனடியாக கொரோனா இல்லை என்ற சான்றிதழை வழங்கக்கோரி சுமார் 300-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் வேலூர் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த வேலூர் தாலுகா காவல் துறையினர் மருத்துவமனை நிர்வாகத்திடமும், போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு சிலருக்கு இரவும், மற்றவர்களுக்கு நாளை காலையும் சான்று வழங்கப்படும் என உறுதியளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

Updated On: 14 Feb 2021 6:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?