/* */

வேலூர் மாவட்டத்தில் பேருந்துகள் இயக்கப்படாது: பொதுமக்கள் ஏமாற்றம்

வேலூர் மாவட்டத்தில் பேருந்துகள் இயக்க அனுமதி கிடைக்காததால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

வேலூர் மாவட்டத்தில் பேருந்துகள் இயக்கப்படாது: பொதுமக்கள் ஏமாற்றம்
X

தமிழகத்தில் கொரோனா 2-வது அலை பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பஸ் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இதையடுத்து தொற்று எண்ணிக்கை குறைய தொடங்கியது. தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று காலையுடன் ஊரடங்கு முடிவுக்கு வந்து பேருந்து போக்குவரத்து மீண்டும் தொடங்கும் என்றும் பொதுமக்கள் எதிர்பார்த்தனர்.

அதற்கேற்றாற்போல் போக்குவரத்து கழக அதிகாரிகளும் பேருந்துகளை இயக்குவதற்காக பணிமனைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துகளை சுத்தம் செய்து இயக்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர். பேருந்து நிலையப்பகுதிகள் சுத்தம் செய்யப்பட்டு, பயணிகள் அமரும் இடம் போன்றவை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டது.

ஆனால், நேற்று தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. அதில் வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பல மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி கிடையாது என தெரிவிக்கப்பட்டது. இதனால் வேலூர் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Updated On: 21 Jun 2021 4:07 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க