/* */

வேலூர் மாநகராட்சியில் வரி பாக்கி வைத்திருப்பவர்களுக்கு நோட்டீஸ்

வேலூர் மாநகராட்சியில் வரியினங்கள் வசூல் மந்தமாக உள்ளதால் ஆண்டு வருவாய் ரூபாய் 127 கோடியில் 40 சதவீதம் மட்டுமே வசூலாகியுள்ளது

HIGHLIGHTS

வேலூர் மாநகராட்சியில் வரி பாக்கி வைத்திருப்பவர்களுக்கு நோட்டீஸ்
X

வேலூர் மாநகராட்சி 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு மண்டலத்திற்கு தலா 15 வார்டுகள் வீதம் மொத்தம் 60 வார்டுகளை கொண்டுள்ளது.

மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் வணிகவளாகங்கள் , கடைகள் கட்டப்பட்டுள்ளது . மொத்தம் 2,500 க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது. இந்த கடைகள் மூலம் மாத வாடகை வசூலிக்கப்படுகிறது . அதோடு மாநகராட்சியில் வீட்டு வரி, சொத்து வரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம், பாதாள சாக்கடை கட்டணம் என்று மாநகராட்சிக்கு வருவாய் கிடைத்து வருகிறது. இந்த வரியினங்கள் மூலமாக மாநகராட்சிக்கு ஆண்டு வருவாய் ரூபாய் 127 கோடி வரையில் கிடைத்து வந்தது.

இந்நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வரியினங்கள் வசூலில் மந்தநிலை தொடர்கிறது. கொரோனா பாதிப்பினால், வரிவசூல் பெரிய அளவில் முடங்கியுள்ளது. மாநகராட்சிக்கு ரூபாய் 127 கோடி ஆண்டு வருவாய் கிடைத்துக்கொண்டிருந்த நேரத்தில் 60 சதவீதம் வரையில் வருவாய் வெகுவாக குறைந்து, 40 சதவீதம் மட்டுமே வசூலாகியுள்ளது.

இதனால் மாநகராட்சியில் வரியினங்கள் பாக்கி வைத்துள்ளவர்களுக்கு மாநகராட்சி சார்பில் வரி வசூலிப்பவர்கள் மூலமாக நோட்டீஸ் வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 4 Aug 2021 12:53 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  2. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  4. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  5. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  6. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  7. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  8. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  9. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு
  10. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!