/* */

மது வாங்க பணம் கேட்டு பாட்டியை கொலை செய்த பேரன்

காட்பாடியில் மூதாட்டியை வெட்டி கொலை செய்த பேரனுக்கு காவல்துறையினர் வலைவீச்சு.

HIGHLIGHTS

மது வாங்க பணம் கேட்டு பாட்டியை கொலை செய்த பேரன்
X

வேலூர் மாவட்டம் காட்பாடி தாராபடவேடு திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் மூதாட்டி சாந்தி (60), இவரது பேரன் அஜித்(20). இருவரும் தனியாக வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் சாந்தி கழுத்தில் வெட்டுக் காயங்களுடன் இறந்து கிடந்துள்ளார். இதனை கண்ட அப்பகுதி மக்கள் காட்பாடி காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மூதாட்டியின் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் மூதாட்டி சாந்தியுடன் வசித்து வந்த அவரது பேரன் அஜித் தலைமறைவாகியுள்ளார். மூதாட்டியின் கொலை குறித்து காவல் துறை மேற்கொண்ட முதல்கட்ட விசாரணையில், பேரன் அஜித்திற்கு குடிப்பழக்கம் இருந்ததாகவும், அடிக்கடி மதுவிற்காக பணம் கேட்டு சாந்தியிடம் தகராறு செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட தகராறில் பாட்டி சாந்தியை பேரன் அஜித் கொலை செய்திருக்கலாம் என தெரியவந்துள்ளது.

மேலும் இச்சம்பவம் தொடர்பாக காட்பாடி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு தலைமறைவாக உள்ள அஜித்தை தேடி வருகின்றனர்.

Updated On: 31 March 2021 4:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க