/* */

பணிக்கு வராத மருத்துவர்களுக்கு அமைச்சர் துரைமுருகன் எச்சரிக்கை

சரியாக பணிக்கு வராத அரசு மருத்துவர்களை பணி நீக்கம் செய்து வீட்டுக்கு அனுப்பிவிடுவேன் என அமைச்சர் துரைமுருகன் எச்சரித்துள்ளார்

HIGHLIGHTS

பணிக்கு வராத மருத்துவர்களுக்கு அமைச்சர் துரைமுருகன் எச்சரிக்கை
X
அமைச்சர் துரைமுருகன் (பைல் படம்)

பொன்னையில் கொரோனா தடுப்பூசி முகாம் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார். பின்னர் ஊரடங்கால் நலிவடைந்தவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்‌.

இதனையடுத்து, பேசிய அமைச்சர் துரைமுருகன், கொரோனா தொற்றால் பாதிக்கப்படாத ஆள்கள் தமிழ்நாட்டில் மிக குறைவு. எனக்குக்கூட தொற்று ஏற்பட்டது. நான் தடுப்பூசி போட்டுகொண்டதால் எனது உயிருக்கு ஆபத்து ஏற்படவில்லை. ஆனால், இதையும் தாண்டி மூன்றாவது அலை வருவதாகக் கூறுகிறார்கள். அது எப்படி இருக்கும் என்று தெரியாது.மக்களுக்கு நோய்கள் வராமல் தடுக்க அரசு மருத்துவ உதவிகளைச் செய்கிறது. ஆனால், நோய் வருபவர்களைத் தேடி மருத்துவர்கள் செல்லுவதற்குதான் 'மக்களை தேடி மருத்துவம்' என்ற புதிய திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

எனவே, தடுப்பூசியை அனைவரும் போட்டுகொள்ள வேண்டும். பொன்னை பகுதியைப் பொறுத்தவரையில் இரண்டு விஷயங்களை சொன்னேன். ஒன்று, கல்லூரி. அதை இந்த ஆண்டு கொண்டு வருவேன். மருத்துவமனையை ஏற்படுத்திவிட்டேன். இது மட்டும் இல்லாமல் நான் கட்டிய மேம்பாலம் 50 ஆண்டுகள் பழையதாகிவிட்டதால், பொன்னையில் புதியதாக மேம்பாலம் அமைத்து தந்துள்ளேன்.

பொன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சரியாக மருத்துவர்கள் பணிக்கு வருவதில்லை என குற்றச்சாட்டு உள்ளது. முறையாக பணி செய்யுங்கள் இல்லையென்றால் இடமாற்றம் செய்யமாட்டேன், பணிநீக்கம் செய்து வீட்டுக்கு அனுப்பிவிடுவேன். புகார் என்றால் என்னை தொலைபேசியில் தொடர்புகொண்டு கூறுங்கள் என்றார்.

Updated On: 12 Sep 2021 8:48 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    திருமண நாள் வாழ்த்துக்கள்: அன்பைப் பொழிந்து, மகிழ்ச்சியைச் சொல்லும்...
  2. லைஃப்ஸ்டைல்
    "குட் நைட்" மட்டும் சொல்லாதீங்க! தமிழ்ல இப்படி சொல்லுங்க!
  3. வீடியோ
    மயிலாடுதுறையில் பலத்த காற்றுடன் மழை ! 50 ஆண்டுகள் பழமையான புளியமரம்...
  4. லைஃப்ஸ்டைல்
    என் அப்பா, என் பெருமை! பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    என்னில் பாதியானவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  6. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 207 கன அடியாக அதிகரிப்பு
  7. லைஃப்ஸ்டைல்
    பக்ரீத் வாழ்த்து சொல்வோம் வாங்க..!
  8. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 232 கன அடியாக அதிகரிப்பு
  9. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை வாழ்த்துக்கள் தமிழ்: 50 பொன்மொழிகளுடன்
  10. உலகம்
    இந்தியா நிலவில் தரையிறங்கியபோது பாகிஸ்தானில் நடந்தது என்ன? வைரலான...