/* */

தேர்தலைப் புறக்கணித்த கிராம மக்கள்: வெறிச்சோடிய வாக்குச்சாவடி

வேலூர் அம்முண்டி கிராம ஊராட்சி மக்கள், உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தலை மக்கள் முற்றிலும் புறக்கணித்தனர்.

HIGHLIGHTS

தேர்தலைப் புறக்கணித்த கிராம மக்கள்: வெறிச்சோடிய வாக்குச்சாவடி
X

வாக்காளர்கள் வராததால் வெறிச்சோடிய வாக்குச்சாவடி

காட்பாடியை அடுத்த அம்முண்டி ஊராட்சியில் ஊராட்சித் தலைவர் பதவிக்கான இடத்தை பெண்களுக்கான எஸ்சி இடமாக அரசு அறிவித்துள்ளது. ஊரில் சொற்பமான எண்ணிக்கையில் வெறும் மூன்றே மூன்று பட்டியலின சமூகத்தினர் இருக்கக்கூடிய நிலையில், இந்த இடத்தை பொது இடமாக அறிவிக்க வேண்டுமென்று அந்த ஊர் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்தனர்.

ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் கடந்த செப்டம்பர் 12, 15 ஆகிய தேதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் செப்டம்பர் 22ஆம் தேதி கிராமத்திலுள்ள வீடுகளில் கறுப்புக் கொடி ஏற்றி, தங்களது எதிர்ப்பைத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இச்சூழலில், இங்குள்ள தலைவர், வார்டு உறுப்பினர் பதவிக்கு ஒருவர் கூட வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. மேலும் தலைவருக்கான இடத்தை பொதுப் பிரிவிற்கு மாற்றாத வரை தேர்தலை புறக்கணிக்கவுள்ளதாக அவ்வூர் மக்கள் அறிவித்திருந்தனர்.

இதனையடுத்து கூறியது போன்றே இன்று ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் ஆகிய பதவிகளுக்கான வாக்குகளை முற்றிலும் செலுத்தாமல் தற்போது தேர்தலைப் புறக்கணித்துள்ளனர்.

ஆயிரத்து 33 பெண் வாக்காளர்கள், ஆயிரத்து 12 ஆண் வாக்காளர்கள் என மொத்தம் 2 ஆயிரத்து 45 வாக்குகள் உள்ள இந்த ஊராட்சியில் தேர்தல் புறக்கணிக்கப்பட்டதால் ஊரிலுள்ள 5 வாக்குச்சாவடிகளும் வெறிச்சோடி காணப்படுகிறது.

Updated On: 6 Oct 2021 12:12 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!