/* */

பாமக தனித்து நின்றால் கூட வெற்றி பெறும்- அமைச்சர் பேச்சு

பாமக தனித்து நின்றால் கூட வெற்றி பெறும்- அமைச்சர் பேச்சு
X

பா.ம.க தனித்து நின்றால் கூட வெற்றி பெறும் என அமைச்சர் கேசி வீரமணி பேசினார்.

வேலூர் மாவட்டம் காட்பாடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ராமு அறிமுக கூட்டம் காட்பாடி காந்தி நகரில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் திருப்பத்தூர் மாவட்ட அதிமுக செயலாளரும் வணிக வரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சருமான கே.சி.வீரமணி கலந்து கொண்டு வேட்பாளரை அறிமுகப்படுத்தினார்.

பின்னர் அமைச்சர் கே.சி.வீரமணி பேசும் போது, நாம் விவசாய கடன், நகை கடன் உள்ளிட்டவற்றை ரத்து செய்துள்ளோம். பல நல்ல திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம் ஒரு இளைஞன், துரைமுருகனை தோற்கடித்தார் என்ற வரலாற்றை காட்பாடியில் நாம் படைக்க வேண்டும் . பிரதமர் மோடி பல்வேறு நல்ல திட்டங்களை தமிழகத்திற்கு வழங்கியுள்ளார். அவர் முதல்வராக இருந்த குஜராத்திற்கு கூட இவ்வளவு செய்திருக்கமாட்டார்.

எய்ம்ஸ் மருத்துவ பல்கலைகழகம் உட்பட 11 மருத்துவகல்லூரிகளை நமக்கு வழங்கியுள்ளார். அதேபோல் பா.ம.க கடந்த 40 ஆண்டுகளாக போராடி வந்த 10.5% இடஒதுக்கீட்டை ஒரே கையெழுத்தில் தீர்த்து வைத்தவர் முதல்வர் பழனிச்சாமி. இன்றைய சூழலில் பா.ம.க தனித்து நின்றால் கூட வெற்றி பெறும் என கே.சி.வீரமணி பேசினார்.

Updated On: 20 March 2021 5:15 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் அலை மோதிய பக்தர்கள் கூட்டம்..!
  2. ஈரோடு
    நம்பியூர் பகுதியில் வெளுத்துவங்கிய மழையால் உடைந்த குளம்..!
  3. ஈரோடு
    அந்தியூர் பெரிய ஏரியில் சிக்கிய 17 கிலோ எடை கொண்ட ராட்சத கட்லா
  4. ஈரோடு
    சென்னிமலை அருகே ரயில்வே நுழைவு பாலத்தில் தேங்கிய நீரில் மூழ்கிய...
  5. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  6. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  7. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  8. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  9. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  10. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!