ரயிலில் உரிய ஆவணமின்றி எடுத்து வந்த வெள்ளிகட்டிகள் பறிமுதல்

ரயிலில் உரிய ஆவணமின்றி எடுத்து வந்த  வெள்ளிகட்டிகள் பறிமுதல்
X
ரயிலில் உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட வெள்ளிக்கட்டிகளை ரயில்வே பாதுகாப்புப்படையின் பறிமுதல் செய்தனர்

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து கேரள மாநிலம் கொல்லம் வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் வெள்ளிக்கட்டிகள், ரொக்கப்பணம் கோவைக்கு கொண்டு செல்லப்படுவதாக ரேணிகுண்டா ரயில்வே பாதுகாப்புப்படைக்கு ரகசிய தகவல் கிடைத்தது . அதன் பேரில் சென்னை மண்டல ரயில்வே பாதுகாப்புப்படை சிஐபி இன்ஸ்பெக்டர் மதுசூதனன்ரெட்டி , சப்- இன்ஸ்பெக்டர் ஆனந்த், தலைமையிலான குழுவினர் ரேணிகுண்டாவில் நின்று புறப்பட்ட குறிப்பிட்ட எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறி சோதனையிட்டனர் .

எஸ் 7 பெட்டியிலும் இவர்களது சோதனை தொடர்ந்தது. அந்த பெட்டியில் சந்தேகப்படும்படி இருந்த 4 பேரிடம் விசாரித்தனர். மேலும் அவர்கள் வைத்திருந்த பைகளில் சோதனையிட்டனர் . இந்த சோதனையில் அவர்களிடம் உரிய ஆவணங்கள் ஏதுமின்றி 1 கோடி மதிப்பிலான 144 கிலோ வெள்ளி கட்டிகள் மற்றும் ரூபாய் 33 லட்சம் ரொக்கப்பணம் ஆகியவை இருப்பது கண்டு பிடிக்கப்பட் டது .

அவற்றை கைப்பற்றிய பாதுகாப்பு படையினர் தொடர்ந்து விசாரணை நடத்தினர் . அதில் அவர்கள் சேலத்தை சேர்ந்த சதீஷ்குமார் , பிரகாஷ் , சுரேஷ் , நித்தியானந்தம் ஆகிய 4 பேர் என தெரியவந்தது. மேலும் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பழைய வெள்ளி நகைகளை விஜயவாடாவில் கட்டிகளாக மாற்றி கோவைக்கு கொண்டு செல்வது தெரிய வந்தது .

அதேபோல் அவர்கள் கையில் கொண்டு வந்த ரூபாய் 33 லட்சம் ரொக்கப்பணத்துக்கான ஆவணம் ஏதுமில்லை என்பதும் தெரியவந்தது . இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த ரயில்வே பாதுகாப்புப்படை குழுவினர் , வேலூர் வணிகவரித்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர் . அத்துடன் , இது போன்று காட்பாடி வழியாக ரயில்களில் உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்படும் தங்கம் , வெள்ளி என விலை உயர்ந்த பொருட்கள் கொண்டு செல்லப்படுவது தொடர்பாக தொடர்ந்து களம் இறங்க ரயில்வே பாதுகாப்புப்படை குழுவினர் முடிவு செய்துள்ளனர்

Next Story
ai powered agriculture