வெடிகுண்டு மிரட்டல்: இரயில் நிலையத்தில் தீவிர சோதனை

வெடிகுண்டு மிரட்டல்: இரயில் நிலையத்தில்  தீவிர சோதனை
X
சென்ட்ரல் இரயில் நிலையத்திற்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் காட்பாடி இரயில் நிலைய சந்திப்பில் தீவிர சோதனை நடந்தது.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று(பிப்-27) சென்னை சென்ரல் இரயில் நிலையத்திற்கு மர்ம நபர்களால் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக வேலூர் மாவட்டம் காட்பாடி இரயில் நிலைய சந்திப்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காட்பாடி இருப்பு பாதை இரயில்வே காவல் துறையினர் இன்று(பிப்-28) காட்பாடி இரயில் நிலையத்தில் ஜூலி மற்றும் ஜேக் ஆகிய இரு மோப்ப நாய்கள் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். பயணிகளின் உடமைகள், இரயில் நிலைய நடைமேடை மற்றும் வெளி வளாகத்திலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி