/* */

அதிமுக கூட்டணி வேட்பாளர் மீது வழக்கு பதிவு

அனுமதி இன்றி கூட்டம் நடத்தியதால் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர் மீது வழக்கு பதிவு.

HIGHLIGHTS

அதிமுக கூட்டணி வேட்பாளர் மீது வழக்கு பதிவு
X

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் (தனி) சட்டமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளராக புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை. ஜெகன்மூர்த்தி போட்டியிடுகிறார்.

இதனிடையே நேற்று முன்தினம்(13.03.2021) கே.வி.குப்பம் சந்தை மேடு பகுதியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் கூட்டணி கட்சியான பா.ம.க ஏற்பாடு செய்திருந்த ஆலோசனை கூட்டத்தில், வேட்பாளர் ஜெகன்மூர்த்தி பங்கேற்று பேசினார். தேர்தல் விதி முறைப்படி அனுமதி பெறாமல் நடந்த ஆலோசனைக் கூட்டம் என்பதால் தேர்தல் நடத்தை விதிமீறல் எனக்கூறி, வேலூர் நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் விக்னேஷ் கே.வி.குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக வேட்பாளர் ஜெகன் மூர்த்தி மற்றும் தனியார் மண்டப உரிமையாளர் சதீஷ்குமார் ஆகிய 2 பேர் மீது கே.வி.குப்பம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 15 March 2021 6:05 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...
  2. லைஃப்ஸ்டைல்
    நேர்காணும் தெய்வம், அம்மா..!
  3. லைஃப்ஸ்டைல்
    அக்கா உள்ளவன் மக்காக இருக்க மாட்டான்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் வரும் துன்பங்கள் நிரந்தரம் அல்ல...பனி போல் விலகும்
  5. வீடியோ
    மிஷ்கின் படத்தில எல்லாமே violenceஅது societyக்கு...
  6. லைஃப்ஸ்டைல்
    ‘நாம் வாழும் ஒவ்வொரு நொடியும் மதிப்புமிக்கது’
  7. லைஃப்ஸ்டைல்
    உணர்ச்சிகளை உரக்கச் சொல்லும் உன்னத மேற்கோள்கள்
  8. லைஃப்ஸ்டைல்
    ஆணவம்: வாழ்வை சிதைக்கும் நஞ்சு
  9. லைஃப்ஸ்டைல்
    பன்முகத்திறனில் தனித்த அடையாளம், சட்டமேதை அம்பேத்கர்..!
  10. வீடியோ
    🔴LIVE: கர்நாடகாவில் அண்ணாமலை அனல் பறக்கும் பேச்சு! | தொண்டர்கள்...