/* */

கே.வி.குப்பம் தொகுதியை கேட்டு அதிமுக தொண்டர்கள் போராட்டம்

கே.வி.குப்பம் தொகுதியை கூட்டணிக்கு ஒதுக்குவதை கண்டித்து அதிமுக தொண்டர்கள் திடீர் போராட்டம், சாலை மறியல்.

HIGHLIGHTS

கே.வி.குப்பம் தொகுதியை கேட்டு அதிமுக தொண்டர்கள் போராட்டம்
X

வேலூர் மாவட்டத்தில் உள்ள மொத்தம் 5 சட்டமன்ற தொகுதிகளில் ஒரு தொகுதி காலியாகவும், 3 தொகுதிகள் திமுக வசமும் உள்ளன. மற்றோரு தொகுதியான கே.வி.குப்பம் தனி தொகுதி அதிமுக வசம் உள்ளது. தற்போது அத்தொகுதி எம்.எல்.ஏவாக ஓய்வு பெற்ற முன்னால் இராணுவ வீரர் லோகநாதன் உள்ளார்.

இந்நிலையில் வரும் சட்டமன்ற பொது தேர்தலில் அதிமுக போட்டியிடும் தொகுதிகள், வேட்பாளர்கள் குறித்த இரண்டாம் கட்ட பட்டியலை வெளியிட்டது. அதில் வேலூர் மாவட்டத்தில் உள்ள கே.வி.குப்பம் தொகுதி இடம் பெறவில்லை என்றும், அத்தொகுதியை மாற்று கட்சிக்கு வழங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகிய நிலையில் கே.வி.குப்பம் தொகுதியில் அதிமுகவே போட்டியிட வேண்டும் என கூறி அக்கட்சியை சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்டோர் லத்தேரி பேருந்து நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு, திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த லத்தேரி காவல் துறையினர் கட்சியினரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

Updated On: 11 March 2021 1:19 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  2. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  3. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  4. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  6. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  7. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  8. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  9. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  10. காஞ்சிபுரம்
    நீட் தேர்வில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு