விபத்து ஏற்பத்தியவரை கைது செய்யகோரி காவல் நிலையம் முற்றுகை.
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த சீத்திராம்பேட்டையை சேர்ந்தவர் ஜெய்சங்கர்(46) இவர் இன்று காலை குடியாத்தம்- கே.வி.குப்பம் சாலையில் வேப்பனேரி பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற போது பின்னால் வந்த கார் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
விபத்து ஏற்படுத்திய கார் நிற்காமல் சென்ற நிலையில் இது குறித்து மாலை வரை கே.வி.குப்பம் காவல் துறையினர் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என கூறி. விபத்து ஏற்படுத்திய கார் ஓட்டுனரை கைது செய்ய வேண்டும், உயிரிழந்த ஜெய்சங்கர் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று ஜெய்சங்கரின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் கே.வி.குப்பம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு குடியாத்தம்-காட்பாடி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
காவல் துறையினரின் நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு சாலை மறியல் கைவிடப்பட்டது. மேலும் இது குறித்து கே.வி.குப்பம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பொது மக்கள் சாலை மறியல் காரணமாக சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu