குடியாத்தத்தில் பைக் திருடிய வாலிபர் கைது

குடியாத்தத்தில் பைக் திருடிய வாலிபர் கைது
X

மாதிரி படம் 

குடியாத்தத்தில் பைக் திருடிய வாலிபரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 5 பைக்குகளை பறிமுதல் செய்தனர்.

குடியாத்தம் டவுன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக பைக்குகள் திருடு போவதாக புகார்கள் வந்ததையடுத்து, குடியாத்தம் சித்தூர் கேட் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி வாலிபரிடம் விசாரணை நடத்தியபோது, குடியாத்தம் கஸ்பா அரசமர தெருவைச் சேர்ந்தவர் விஷ்ணு என்கிற வசீகரன் என்பதும், ஓட்டி வந்தது திருட்டு பைக் எனவும் தெரியவந்தது.

அதுமட்டுமல்லாது, குடியாத்தம் புதுப்பேட்டை பிள்ளையார் கோவில் தெரு, கீழ் சுதந்திர வீதி, கள்ளூர் கேஎம்ஜி கார்டன், காமாட்சியம்மன்பேட்டை, திருமலை கார்டன் உள்ளிட்ட பகுதிகளில் பைக்குகளை திருடியதும் தெரியவந்தது.

வசீகரனிடம் இருந்த 5 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
ai in future agriculture