/* */

குடியாத்தத்தில் கூடுதல் விலைக்கு மாஸ்க் விற்பனை செய்த கடைகளுக்கு அபராதம்

குடியாத்தத்தில் கூடுதல் விலைக்கு மாஸ்க் விற்பனை 3 மருந்து கடைகளுக்கு ரூபாய் 6 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது

HIGHLIGHTS

குடியாத்தத்தில் கூடுதல் விலைக்கு மாஸ்க் விற்பனை செய்த கடைகளுக்கு அபராதம்
X

கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள மற்றும் கொரோனா பரவலை தடுக்க மாஸ்க் அணிவது அத்தியாவசியமாக மாறியுள்ளது . இதனை சாதகமாக பயன்படுத்தி மருந்து கடைகளில் கூடுதல் விலைக்கு மாஸ்க் விற்பனை செய்வதாக வேலூர் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கிடைத்தது . அதன்பேரில் வேலூர் கலெக்டர் சண்முகசுந்தரம் , அதிகவிலைக்கு மாஸ்க் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தார் .

இந்நிலையில் குடியாத்தம் நகர பகுதிகளில் உள்ள மருந்து கடையில் கூடுதல் விலைக்கு மாஸ்க் விற்பனை செய்வதாக சப் - கலெக்டர் ஷேக் மன்சூருக்கு தகவல் கிடைத்தது . அவரது உத்தரவின் பேரில் குடியாத்தம் நகராட்சி ஆணையாளர் ( பொறுப்பு ) சுசில் தாமஸ் மற்றும் நகராட்சி அதிகாரிகள் குடியாத்தத்தில் உள்ள 15க்கும் மேற்பட்ட மருந்து கடைகளில் ஆய்வு செய்தனர் . அப்போது , 3 கடைகளில் கூடுதல் விலைக்கு மாஸ்க் விற்பனை செய்தது தெரியவந்தது . இதையடுத்த தலா ரூ .2 ஆயிரம் வீதம் 3 மருந்து கடைகளுக்கு அபராதம் விதித்தனர் .

மேலும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத 6 கடைகளுக்கு தலா 1500, நகர பகுதியில் மாஸ்க் அணியாமல் சென்ற 30 பேருக்கு தலா 200 என அபராதம் வசூலிக்கப்பட்டது .

Updated On: 11 Jun 2021 11:44 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  2. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  3. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பு கணவருக்கு அருமையான பாராட்டு மொழிகள்
  5. ஆன்மீகம்
    ஷீரடி சாய்பாபாவின் அற்புதமான பொன்மொழிகள்
  6. வீடியோ
    🔴LIVE: ரசவாதி படத்தின் இசை வெளியீட்டு விழா | Arjun Das | Tanya...
  7. லைஃப்ஸ்டைல்
    'அன்பு' வாழும் 'இல்லம்', கூட்டுக்குடும்பம்..!
  8. வீடியோ
    🔴LIVE :சவுக்கு சங்கர் மேல் கஞ்சா வழக்கில் கைது | பொங்கி எழுந்த சீமான்...
  9. சேலம்
    மரத்தில் இருந்து தவறி விழுந்து மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல்...
  10. லைஃப்ஸ்டைல்
    மரணம், இயற்கையின் நீள்துயில்..!