/* */

ஆபத்தான நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கதொட்டியை அகற்ற வலியுறுத்தல்

குடியாத்தம் அருகே ஆபத்தான நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கதொட்டியை அசம்பாவிதம் ஏற்படும் முன்அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

HIGHLIGHTS

ஆபத்தான நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கதொட்டியை அகற்ற வலியுறுத்தல்
X

தட்டாங்குட்டை கிராமத்தில் ஆபத்தான நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த மேல்முட்டுக்கூர் ஊராட்சி தட்டாங்குட்டை கிராமத்தில் உள்ள அங்கன்வாடி பள்ளி அருகே 25 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது.

சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, கடந்த சில ஆண்டுகளாக பழுதடைந்ததால் இதனை அகற்ற கோரி அப்பகுதி கிராம மக்கள் அதிகாரிகளிடம் மனு அளித்ததாக கூறுகின்றனர். மேலும் பலமாக காற்று அடிக்கும் போது இந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அசைவதாகவும் கூறப்படுகிறது.

இதன் அருகே அங்கன்வாடி மையம் இருப்பதால் இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியால் ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக அந்த மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டியில் தண்ணீர் நிரப்புவது இல்லை. இது பயன்பாடற்ற நிலையில் உள்ளது.

இந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை உடனடியாக அதிகாரிகள் அகற்ற வேண்டும் எப்போது வேண்டுமானாலும் இந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கீழே சரியும் அபாயம் இருப்பதாக அப்பகுதி பொது மக்கள் அச்சப்படுகின்றனர்.

எனவே ஏதாவது அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அகற்ற பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Updated On: 31 March 2022 12:24 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    அதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ்? ஆர்.பி.உதயகுமார் காட்டம்..!
  2. தமிழ்நாடு
    கோவாக்சின் போட்டவர்களும் தப்ப முடியாதாம்..! புதிய வதந்தி..!
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை...
  5. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட நெகிழி பைகள் பறிமுதல்..!
  6. கீழ்பெண்ணாத்தூர்‎
    வாசவி அம்மன் ஜெயந்தி விழா..!
  7. நாமக்கல்
    நிதி நிறுவன ஊழியரை தாக்கி வழிப்பறி- வாலிபர் கைது: சிறுவன் உட்பட 3...
  8. கலசப்பாக்கம்
    திருவண்ணாமலை மாவட்டத்தில் பரவலாக மழை விவசாயிகள் மகிழ்ச்சி..!
  9. ஆரணி
    முத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா..!
  10. காஞ்சிபுரம்
    வாலாஜாபாத் அருகே சாலை விபத்தில் லாரி ஓட்டுனர் பலி...!