/* */

பாஸானது தெரியாமல் மீண்டும் 10-ம் வகுப்பு படித்த அரசு பள்ளி மாணவன்

குடியாத்தம் வளத்தூர் அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றும் மாணவர் அதே வகுப்பில் படித்தது குறித்து கல்வி அதிகாரிகள் விசாரணை

HIGHLIGHTS

பாஸானது தெரியாமல் மீண்டும் 10-ம் வகுப்பு படித்த அரசு பள்ளி மாணவன்
X

பாஸானது தெரியாமல் மீண்டும் 10-ம் வகுப்பு படித்த அரசு பள்ளி மாணவன்

வேலூர் மாவட்டம் வளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், படித்து வரும் கணேசனுக்கு. தற்போது பொதுத்தேர்வுக்கான ஹால்டிக்கெட் வந்துள்ளது. அப்போது கணேசனின் பெற்றோரை அழைத்த பள்ளி நிர்வாகம், தங்கள் மகன் கடந்த ஆண்டே தேர்ச்சி பெற்றுவிட்டதாகவும், இதனால் இந்த ஆண்டு தேர்வு எழுத வேண்டியதில்லை என்றும் கூறியுள்ளது.

இதனால் மாணவர் கணேசன் மற்றும் அவரது பெற்றோர் குழம்பியுள்ளனர். அப்போதுதான் கடந்தாண்டே மாணவர் கணேசன் 10ம் வகுப்பு பாஸ் ஆனது தெரியவந்தது. கொரோனா தொற்று காரணமாக அனைவரும் தேர்ச்சி என தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில், மாணவர் கணேசனை வளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி நிர்வாகம், மீண்டும் 10ம் வகுப்பிலேயே சேர்த்து படிக்க வைத்திருக்கிறது.

மாணவரும், தான் பாஸ் ஆனது கூட தெரியாமல் கல்வி பயின்று வந்துள்ளாக தெரிகிறது. இந்த சம்பவம் குறித்து கல்வித் துறை உயர் அதிகாரிகள் கவனத்திற்கு சென்றதால் கல்வித்துறை உயரதிகாரிகள் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 27 April 2022 1:35 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. இந்தியா
    கேரளாவில் 'நைல் காய்ச்சல்' பரவல்! 10 பேருக்கு பாதிப்பு!
  4. வணிகம்
    இப்ப தங்கம் வாங்கலாமா? விலை உயருமா..?குறையுமா..?
  5. இந்தியா
    கோவிஷீல்டு போட்டவர்களா நீங்கள்..! கவலைய விடுங்க..! டாக்டர் என்ன...
  6. வீடியோ
    🔴LIVE : சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் பேட்டி ||...
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  8. ஈரோடு
    ஈரோட்டில் தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானம்: அரசு மரியாதை
  9. உலகம்
    உலகளவில் கொரோனா தடுப்பூசியைத் திரும்பப் பெறும் அஸ்ட்ராஜெனகா
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் காய்கறி இன்றைய விலை