/* */

12ம் வகுப்பு மாணவியை கடத்திய கல்லூரி மாணவன் கைது

குடியாத்தம் அருகே 12ம் வகுப்பு படித்து முடித்த மாணவியை கடத்திய கல்லூரி மாணவன் போக்சோ சட்டத்தில் கைது

HIGHLIGHTS

12ம் வகுப்பு மாணவியை கடத்திய கல்லூரி மாணவன்  கைது
X

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த மேல்பட்டி பகுதியை சேர்ந்த 17 வயது 12 ம் வகுப்பு படித்து முடித்த பள்ளி மாணவியை கடந்த 23 ஆம் தேதியிலிருந்து காணவில்லை என அவரது தந்தை மேல்பட்டி போலீசில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட மேல்பட்டி போலீசார் மேல்பட்டி அருகே கொத்தமாரிகுப்பம் பகுதியில் மாணவியை மீட்டனர். மேலும் அவருடன் இருந்த இளைஞரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் அவன் பெயர் கௌதம்( 21)என்பதும் அவன் குடியாத்தம் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருவதும் தெரிய வந்தது.

மேலும் ஆசை வார்த்தை கூறி மாணவியை கடத்திச் சென்றதும் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து மாணவியின் தந்தை அளித்த புகாரின் பேரில் கௌதமை கைது செய்த மேல்பட்டி போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Updated On: 26 Jun 2021 1:15 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் காய்கறி இன்றைய விலை
  2. திருவண்ணாமலை
    பிளஸ் 2 தேர்வில் 92 சதவீதம் தேர்ச்சி , ஆசிரியர்கள் கௌரவிப்பு
  3. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதை கழிப்பறைகள் பராமரிப்பு, மகளிர் குழுவினருக்கு ஊக்கத்தொகை...
  4. நாமக்கல்
    மோகனூர் வடக்கு துணை அஞ்சலகம் திடீர் இடமாற்றம்: பொதுமக்கள் அதிர்ச்சி
  5. செங்கம்
    சூறைக்காற்றால், திருவண்ணாமலை மாவட்டத்தில் வாழைகள் சேதம்
  6. நாமக்கல்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி 14 அரசுப் பள்ளிகளுக்கு...
  7. இந்தியா
    ம‌க்களவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்த‌ல்: 93 தொகுதிகளி‌ல் 64% வா‌க்கு‌ப்பதிவு
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. ஆரணி
    பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய விஏஓ கைது
  10. திருவண்ணாமலை
    மழை வேண்டி திருவாசகத்தை சுமந்தபடி கிரிவலம்