வேலூர் மாவட்டத்தில் இன்று முதல் குடற்புழு நீக்க மாத்திரை விநியோகம்

வேலூர் மாவட்டத்தில் இன்று முதல் குடற்புழு நீக்க மாத்திரை விநியோகம்
X

பைல் படம்

வேலூர் மாவட்டத்தில் தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் திட்டத்தின் கீழ் 5.17 லட்சம் பேருக்கு மாத்திரை விநியோகிக்க இலக்கு

வேலூர் மாவட்டத்தில் தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் திட்டத்தின் கீழ் 1 முதல் 19 வயதுக்குட்பட்டவர்களுக்கும் 20 முதல் 30 வயதுக்குட்பட்ட பெண்களுக்கும் (கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் தவிர ) 13ம்தேதி முதல் வரும் 18ம்தேதி வரை குடற்புழு நீக்கும் மாத்திரை ( அல்பெண்டசோல் ) வழங்கப்படுகிறது.

இதேபோல் 2 வது கட்டமாக வரும் 20ம் தேதி முதல் 25ம் தேதி வரையும், விடுபட்டவர்களுக்கு 27ம் தேதியும் அல்பெண்டசோல் மாத்திரை வழங்கப்படுகிறது. இதற்கான முகாம்கள் அங்கன்வாடி மையங்கள், துணை சுகாதார நிலையங்கள் , ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவைகள் மூலமாக சுகாதார பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் ஆஷா பணியாளர்கள் மூலம் வழங்கப்படுகிறது.

1 வயதிலிருந்து 2 வயதுக் குட்பட்ட குழந்தைகளுக்கு அரை மாத்திரையும், 2 முதல் 19 வயது உடையவர்களுக்கு 1 மாத்திரையும், 20 முதல் 30 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு 1 மாத்திரையும் வழங்கப்படுகிறது. இந்த மாத்திரையானது காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை வழங்கப்படும். இதனை காலை சிற்றுண்டிக்கு பிறகு அல்லது மதிய உணவிற்கு பிறகு எடுத்துக்கொள்ள வேண்டும். இரண்டு சுற்றுகளில் வேலூர் மாவட்டத்தில் 1 வயதிலிருந்து 19 வயதுக் குட்பட்ட 4,03,906 குழந் தைகளுக்கும், 20 முதல் 30 வயதுக்குட்பட்ட 1,13,495 பெண்களுக்கும் மொத்தம் 5,17,401 நபர்களுக்கு குடற் புழு நீக்க மாத்திரை வழங்க இலக்கு நிர்ணயக்கப்பட்டு உள்ளது.

Tags

Next Story
AI மரங்களை நடவு செய்வதில் புரட்சி: சரியான இடத்தை எப்படி கண்டுபிடிப்பது?