/* */

வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை

வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலில் தண்ணீர் தேங்கி நிற்பதால், பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

HIGHLIGHTS

வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை
X

ஜலகண்டேஸ்வரர் கோவிலில் நீர் தேங்கிக்கிடக்கும் காட்சி

வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலுக்குள் அகழி தண்ணீர் கடந்த 12-ந்தேதி புகுந்தது. கோவில் வளாகத்தில் உள்ளே இருக்கக்கூடிய குளம் பகுதி முழுவதுமாக தண்ணீர் தேங்கியது. பக்தர்கள் முழங்கால் அளவு தண்ணீரில் நடந்து சென்று சாமி தரிசனம் செய்தனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவிலில் ஆய்வு செய்த கலெக்டர் குமாரவேல் பாண்டியன், அபிஷேக நீர் செல்லும் வழியாக கோவிலுக்குள் தண்ணீர் வந்ததால் அதை மூடி விட்டு, உள்ளே இருக்கக்கூடிய தண்ணீரை மோட்டார் மூலம் வெளியேற்ற உத்தரவிட்டார். ஆனால் தண்ணீரை வெளியேற்ற முடியவில்லை.

நேற்று அம்மன் சன்னதி கருவறைக்குள் தண்ணீர் புகுந்ததால், அர்ச்சகர்கள் தண்ணீரில் நின்று கொண்டு அம்மனுக்கு பூஜை செய்தனர். தொடர்ந்து நீர் மட்டம் உயர்ந்ததால் இன்று காலை மூலவர் ஜலகண்டேஸ்வரர் சன்னதி பகுதிகளையும் தண்ணீர் சூழ்ந்தது. கோவிலுக்குள் சுரங்கப்பாதை அமைந்துள்ள இடம், தண்ணீர் வெளியேறும் குழாய் ஊற்று போன்றவற்றிலிருந்து தண்ணீர் வந்து கொண்டே இருக்கிறது.

இதனால் இன்று காலையில் ஜலகண்டேஸ்வரர் கோவிலில் இடுப்பளவு தண்ணீர் தேங்கியது. மேலும் பல இடங்களில் பாசி படர்ந்து வழுக்கி விழ கூடிய சூழ்நிலை உள்ளது. தண்ணீரும் அசுத்தம் அடைந்து வருகிறது. ராஜகோபுரத்திற்கு வெளியே சிறப்பு அலங்காரம் செய்து வைக்கப்பட்டுள்ள உற்சவர் மற்றும் அம்மனை பக்தர்கள் வழிபட்டு சென்றனர்.

தண்ணீர் வடியும் வரை கோவில் பூட்டப்பட்டிருக்கும். கோவிலுக்கு வெளியே பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

Updated On: 30 Nov 2021 12:28 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வெஸ்ட் நைல் காய்ச்சல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  3. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் முத்தாலம்மன் கோயில் கூழ் வார்த்தல் திருவிழா
  4. நாமக்கல்
    தனியார் ரிசார்ட் வாடிக்கையாளருக்கு 10 ஆண்டுகள் கட்டணமின்றி அறை வழங்க...
  5. ஈரோடு
    அந்தியூர் அருகே தோட்டத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை
  6. திருவண்ணாமலை
    கோடை வெப்பத்தை எதிர்கொள்ள காவல்துறையினருக்கு சன் கிளாஸ்
  7. நாமக்கல்
    நாமக்கல் மாவட்ட கூட்டுறவுத்துறை அலுவலர்கள் ரத்ததானம் வழங்கல்
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. நாமக்கல்
    சூறாவளிக்காற்றால் மின்கம்பம் முறிந்தது; இருளில் மூழ்கிய கிராமம்
  10. ஈரோடு
    ஈரோடு மாவட்ட அரசு ஐடிஐக்களில் சேர ஜூன் 7ம் தேதிக்குள்...